முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாறா குறித்த தனது அன்பை துல்கர் சல்மான் பகிர்கிறார்

சார்லி முதல் மாறா வரை: ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வரவிருக்கும் மாறா திரைப்படத்துக்காக மனமுருகச் செய்யும் ஒரு கவிதைக்கு குரல் கொடுத்துள்ளார் துல்கர் சல்மான்

அமேசான் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான மாறா வரும் ஜனவரி8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.  மேலும் இப்படம் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் காணக்கிடைக்கும். திலிப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இந்த தமிழ் காதல் ம்யூசிக்கல் திரைப்படம் நிச்சயம் இந்த புத்தாண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக உள்ளது.

துல்கர் சல்மான் நடித்த மலையாளத் திரைப்படமான சார்லி-யின் தழுவலே மாறா. அசல் படத்தின் கருவை அழகான முறையில் எடுத்து மாறா மற்றும் பாருவின் புதிய மற்றும் தனித்துவமான ஒரு மாயாஜால உலகை நமக்கு இப்படம் தருகிறது. அன்பு மற்றும் பாராட்டை வழங்கும் வகையில் துல்கர் சல்மான் (எ) சார்லி நினைவுகளால் நெய்த மனமுருகச் செய்யும், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் இதயத்தை உடனடியாக தொடும் ஒரு கவிதையை மாறாவுக்காக வாசித்துள்ளார்.

அந்த பதிவை இங்கே பார்க்கலாம்:

முன்னதாக, ஆர் மாதவன் தனது நண்பர் துல்கரின் விசேஷ கவிதைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இயக்குநர் திலீப்பும் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். 

https://twitter.com/ActorMadhavan/status/1346374589538963458

https://mobile.twitter.com/dhilip2488/status/1346421292166041601 

மாதவனின் இனிமையான வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில், துல்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “Thank you dearest Maddy-na. You’ve been a huge inspiration! I was really touched when you & the team wanted to include me/Charlie in some way in #Maara! All of us from team #Charlie wish team #Maara only the best. We cannot wait to watch your version! love & prayers!” என்று பதிவிட்டுள்ளார். 


https://twitter.com/dulQuer/status/1346411895239168001

திலிப் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை மனமுருகச் செய்யும் ஒரு மாயாஜால பயணத்துக்கு கொண்டு சென்றதோடு, வெளியான சில மணிநேரங்களில் கோடிக்கணக்கான இதயங்களை வென்று அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தவிர்த்து, மாறா திரைப்படத்தில் அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 8, 2021 அன்று கலை, இசை, காதல், நம்பிக்கை ஆகியவற்றை கொண்ட ஒரு புது உலகத்துக்கு பாருவுடன் அழகான பயணத்துக்கு தயாராகுங்கள், அவர் மாறாவை கண்டுபிடிக்கச் செல்லும்போது ஆன்மாவைத் தேடும் ஒரு அனுபவத்தை உறுதி செய்யுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

இனி, சட்டப்படி பேசுங்கள்

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.  சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

Annual Eye Screening Must for Diabetics to Save Eyesight: Dr Agarwals Eye Hospital

Chennai, November 2024: “There are 101 million people diagnosed with diabetes and 136 million people diagnosed with prediabetes in India. Around 10% of individuals (approx. 1 in 10) with diabetes will develop some form of diabetic eye disease post 10 years of their diagnosis or even earlier. This can lead to severe vision loss or even blindness. However, a vast portion of diabetics population do not go for eye checkups because there is not enough awareness that diabetes could affect eyes as much as it does heart or kidney. Also, diabetic retinopathy can remain free of symptoms initially” said Dr. Manoj Khatri, Clinical Lead and Head, Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital, Chennai.   “Regular screening and early detection of the risks of this disorder can help crores of Indians either to prevent or manage diabetes. Type 2 diabetes can even be prevented, or its onset can be delayed with a few lifestyle changes and healthy eating. Keeping blood sugar, blood pressure, a...