முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடிகர் அசோக் செல்வனின் இதயம் கனிந்த நன்றிகள் !

நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக  பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் சிலது மட்டுமே  நடிகர்களின் மனதிற்கு நெருக்கமான பாத்திரமாக இருக்கும். அதில் சில பாத்திரங்கள் வசூலில்  மிகப்பெரும் வெற்றியை பெறுகிறது. சில பாத்திரங்கள் விமர்சகர்களிடம் சிறப்பான பாராட்டுகளை பெறுகிறது. சில பாத்திரங்களை ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்கிறது. மிக சொற்பமான பாத்திரங்களே அனைத்து வகையிலும் முழுமையடைகிறது. அம்மாதிரியான பாத்திரங்கள் நடிகர்களின் அடையாளமாகிவிடும். என்னுடைய “மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” அந்த   வகையிலான ஒரு அழகான திரைப்படம். இந்திய அளவில்  எல்லாவகையிலும் சிறந்ததொரு நடிகரென, புகழ்பெற்ற நடிகர் மோகன்லால் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த  போது, நான் மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த நொடியை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. பிரியதர்ஷன் போன்ற வரலாற்று பெருமை கொண்ட இயக்குநரின் படத்தில் நடிப்பது மிகப்பெரும் பெருமை.

குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ள ‘குட்டி பட்டாஸ்’

சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் - நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர். வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி. வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். உடனே இணையத்தில் இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்.

துல்கர் சல்மானின் “குருப்” டீஸர்

துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை பாத்திரங்களாகட்டும் அனைத்திலும் துள்ளலான நடிப்பை தந்து அனைவரையும் மிரள செய்கிறார் துல்கர் சல்மான். அடுத்ததாக  சுகுமாரன் குரூப் பாத்திரத்தில் அவர் அசத்தும் “குருப்” படத்தின் டீஸர் நேற்று  மாலை வெளியானது. 70 நொடிகள் கொண்ட இந்த டீஸர் வெளியான வேகத்தில் இணையத்தில் தீயாக பரவி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழு இந்திய நாயகனாக இந்தியா முழுக்க ரசிகர் பட்டாளம் வைத்திருப்பதால்  இந்தியா முழுக்கவும் வரவேற்பை குவித்திருக்கிறது இந்த டீஸர். அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும்,  ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. “குருப்” திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ

ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கும் R. கண்ணன் இயக்கும் புதிய படம்

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும்  ‘புரொடக்க்ஷன் 5' தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது. கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட" தி கிரேட் இந்தியன் கிச்சன் " படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை.  இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மீண்டும் இவருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் குவியும் கேரக்டராக இது அமையும். இதன் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் ஆரம்பமாகியது. முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். காரைக்குடியிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெறும்.   இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ' மாஸ்கோவின் காவேரி ' படம் மூலம் சமந்தாவுடன்  அறி

வெற்றிமாறனுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு வாழ்த்து

மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தட்டிச்சென்றுள்ளார் . இன்று வெற்றிமாறனை தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . தேசிய விருது என்பது பெரிய ஊக்கம் என வெற்றிமாறன் கூறியுள்ளார் . வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் , பாலாஜி  சக்திவேல் ,அம்மு அபிராமி , டீஜே அருணாச்சலம்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன் - விஷ்ணு விஷால்

இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் இன்று  சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது... சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் 'காடன்' வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் 'எஃப் ஐ ஆர்'  வெளியாகவிருக்கிறது. 'மோகன்தாஸ்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். 'ஜீவி' படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம

வரலாற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள், தேசிய பளு தூக்கும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

18வது சீனியர் மற்றும் 14வது ஜூனியர் தேசிய பாரா பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் 2021 கர்நாடகா பெங்களூர் மார்ச் 19  முதல் 21 ஆம் தேதி வரை ஸ்ரீ கண்டி ரவா  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சார்பாக கலந்து கொண்ட வீரர்களுக்கு  பயிற்சி அளித்த பயிற்சியாளர் திரு. கணேஷ் சிங் மற்றும் அணி மேலாளர் திரு விஜயசாரதி தலைமையில் ஆண்கள் பிரிவில் 7 வீரர்களும் பெண்கள் பிரிவில் 2  வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 6 பதக்கங்களை வென்று குவித்தனர்.   1. V.சரவணன்   59 எடை பிரிவு    தங்கப்பதக்கம் ( தமிழக வரலாற்றின் பேரா பவர்லிப்டிங் பிரிவில் முதல் தேசிய தங்கப்பதக்கம் )   2. C.வெங்கடேஷ் பிரசாத்  59எடை பிரிவு ( தமிழக வரலாற்றின் முதல் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம்)   3. B. கோமதி  50 எடை பிரிவு வெள்ளிப் பதக்கம்   4. R. கஸ்தூரி - 67 எடை பிரிவு ( முதல் பாரா பெண் பவர் லிப்டிங் சாம்பியன்)  வெள்ளிப் பதக்கம்   5. G .வேல்முருகன்- 65 எடை பிரிவு  வெண்கலப்பதக்கம்   6. M. கிருஷ்ணமூர்த்தி 59 எடை பிரிவு  வெண்கல பதக்கம்   வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் ச

MGM Healthcare, Chennai receives prestigious JCI Accreditation

  ~Becomes one of the youngest hospitals in India to receive the international accreditation~ Chennai, March 22 nd , 2021:  MGM Healthcare, a leading quaternary care super-specialty hospital in the heart of Chennai city, announced today that it has received the prestigious Joint Commission International (JCI) accreditation, which is considered the gold standard in healthcare worldwide. An extensive on-site audit was conducted at the hospital by a team of international expert surveyors who assessed patient safety goals, patient assessment and care, anaesthesia and surgical care, medication management, patient and family education, quality improvement, infection prevention and control, governance and leadership, facility management, staff qualifications and education, and information management, in accordance with the best international standards and protocols Dr Prashanth Rajagopalan, Director, MGM Healthcare, commented on this achievement and said, “We at MGM Healthcare always believe

மூன்றாவது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட புகழ், RDM, சுரேஷ் ரவி கூட்டணி

நீண்ட பொதுமுடக்க காலத்தின் பாதிப்புகள்,  உலகம் முழுக்க அனைத்து துறைகளிலும் எதிரொலித்தாலும், திரைத்துறையை தான்  அதிகம் பாதித்தது. ஆனாலும் நல்ல சினிமாக்களை மக்கள் என்றும் கைவிடுவதில்லை.  இந்த பொதுமுடக்க காலம் முடிந்து  தமிழ்திரையில் வெளியான “காவல்துறை உங்கள் நண்பன்” அதன் தரமான கருத்தியல்களுக்காக, மிக அற்புதமான உருவாக்கத்திற்காக அனைவராலும் பாராட்டு பெற்றது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்த நிலையில் “காவல்துறை உங்கள் நண்பன்” பட  RDM, சுரேஷ் ரவி  கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்திற்காக  இணைந்துள்ளார்கள். இன்னும் தலைப்பிடப்படாத இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் Preniss International (OPC) Pvt Ltd சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் இயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தையும் தற்போது வெளியாக காத்திருக்கும் ”நட்சத்திரா” படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குநர் RDM கூறியதாவது... “காவல்துறை உங்கள் நண்பன