முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாராட்டு மழையில் நடிகை ஹூமா குரேஷி

‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷி, தனது தனித்துவமான நடிப்பால், தமிழ் ரசிகர்களின் விருப்பமிகு நாயகியாக மாறியுள்ளார்.  ‘வலிமை’ படத்தில் அவரது நடிப்பு, பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து அன்பும் பாராட்டும் குவிந்து வருவதால், நடிகை ஹூமா குரேஷி மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார். குறிப்பாக, படத்தில் அவரது ஆக்சன் காட்சிகள் அவருக்கு சிறப்பான பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. வலிமை படத்தின் பிரமாண்ட வெற்றியில் பெரும் உற்சாகத்துடன் இருக்கும் நடிகை ஹுமா குரேஷி கூறியதாவது.., “அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும், பாசமும் என்னை வியப்படைய செய்துள்ளது. இந்நேரத்தில் அஜித் குமார் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஜித் சாருடன் பணிபுரிய வேண்டும் என்கிற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்தை, எனக்கு பரிசளித்த அஜித் சார், திரு.போனி கபூர் மற்றும் இயக்குனர் எச்.வினோத் ஆகியோருக்கு நன்றி. ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் " ரஜினி "ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி " சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி - மனோ V.நாராயணா கலை - ஆண்டனி பீட்டர் நடனம் - செந்தாமரை எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ் ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன் தயாரிப்பு மேற்பார்வை - நிர்மல் புரொடக்ஷன் கண்ட்ரோளர் - பூமதி - அருண் மக்கள் தொடர்பு - மணவை புவன் இணை தயாரிப்பு - கோவை பாலசுப்ரமணியம். தயார

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா - தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிராஃபிக் நாவலின் அறிமுக பிரதியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வெளியிட்டார். புத்தக வெளியீட்டாளர்கள் தற்போது இப்புத்தகம் முன்பதிவு மூலம் Amazon.in தளத்தில் கிடைக்குமென அறிவித்துள்ளனர். சென்னை, 23 பிப்ரவரி 2022:  ரசிகர்களின் ஆர்வமிகு எதிர்பார்ப்பு நிறைவுக்கு வந்தது. எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா: தி ஆரிஜின்’ முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இன்று முதல் Amazon.in தளத்தில் புத்தகத்தை ரசிகர்கள் முன்பதிவு மூலம்  ஆர்டர் செய்யலாம் என்று புத்தக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். சிறப்பு முன்பதிவு ஆர்டரில்  புத்தகத்தின் விலை ரூ.1499 ஆகும். அதர்வா: தி ஆரிஜின் புத்தகத்தின்  தயாரிப்பாளர்கள் புத்தகத்தின் முன் அட்டையை தற்போது  வெளியிட்டுள்ளனர், இதில் எம்எஸ் தோனி முந்தைய மோஷன் போஸ்டரில் இருந்த தோற்றத்தை விட, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வசீகரமாக தோற்றமளிக்கிறார் எம்.எஸ் தோனி. தங்க கவச உடையில், அவரது டிரேட்மார்க் நீண்ட கூந்தலுடன், மிடுக்கான அழகுடன் ஒரு சூப்பர் ஹீரோவின் தோற்றத்தில் உள்ளார். அவரது தோற்றம்  ரசிகர்களின

“மழை பிடிக்காத மனிதன்” என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பு - இயக்குநர் விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளராக 37 படங்கள் இயக்குநராக 8 படங்கள் என, திரைத்துறையில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன். இயக்கமாக இருந்தாலும், ஒளிப்பதிவாக இருந்தாலும் அவரது திறமை  தனித்து கொண்டாடப்படும். தன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படைப்பாக நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி வருகிறார். INFINITI FILM VENTURES வழங்க, விஜய் ஆண்டனி நடிக்கும்,  இப்படத்தில் “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புரட்சி கலைஞர் விஜயகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் பரப்பரப்பான படப்பிடிப்பில் இருக்கும் “மழை பிடிக்காத மனிதன்”  படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறியதாவது… நானும் விஜய் ஆண்டனியும் நீண்ட வருடங்களாகவே நெருங்கிய நண்பர்கள், நான் இயக்குநராக முயற்சித்த போது, அவர் நடிகராக முயற்சித்தார். சமீபத்தில் அவரை சந்தித்த போது அவரிடம் இந்த கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆரம்பித்து விட்டோம். இப்படம் ஒரு உணர்ச்

உடல் எடை ஏற்றினேன். நிறைய உழைத்தேன். உழைத்தால் தான் சினிமா அங்கீகாரம் தரும் - RK சுரேஷ்

  இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் ஸ்டூடியோ 9 நிறுவனர் சிவக்குமார் பேசியதாவது… எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் திரைப்படம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது… மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி குவிச்ச படம், இத்தனை அவார்டு வாங்கின படத்த ரீமேக் பண்ண யாரும் யோசிப்பாங்க, அதிலும் பெஸ்ட் ஹீரோ அவார்ட் வாங்கின படம், அப்படி ஒரு படத்த தைரியாமா நல்ல படத்த கொடுக்கனுமுனு எடுத்துட்டு வந்திருக்காங்க. இந்த படத்தில் நடிக்க நிற

நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ள " தீ இவன் " படத்தின் டப்பிங் துவங்கியது

  மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.J ,ஸ்ரீதர் , ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி,தீபிகா,சிங்கம்புலி,ஜான்விஜய்,சரவனசக்தி,இளவரசு,ஆகியோர் நடித்த இப்படத்தின் டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது. இப்படத்தின் பாடல்களை புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடிய பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி, செந்தில், தனி ஒருவன் படத்தில் கண்ணாலா கண்ணாலா... பாடலை பாடிய பத்மலதா என பல்வேறு பிரபல பாடகர்கள் பாடி உள்ளார்கள். ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாரித்து இயக்கிய T. M. ஜெயமுருகன் இப்படத்தை திரைக் கதை ,பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலிமிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலா ஜெயமுருகன் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

  நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீ ஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள வலிமை படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது. கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் இதில் தோன்றியுள்ளார். சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை தனக்கே உரிய பாணியில் ராகவன் கையாள்வதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது. திரைப்பட பிரபலங்கள், விமர

நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ள "இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்"

         Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது… எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புராஜக்ட்களை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல படைப்புகளை தயாரிப்போம், ஆதரவு தாருங்கள் நன்றி. இயக்குநர் கார்த்திக் பேசியதாவது… இப்பாடல் முழுக்க முழுக்க சாண்டி மாஸ்டர் ஐடியா தான் அவர் ஐடியாவை தான் நான் எடுத்தேன் அவ்வளவு தான், உங்களுக்கு பாடல் பிடிக்குமென நம்புகிற

இன்றைய பெண்களுக்கான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் வீடியோ பாடலான 'இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்...'-க்காக இணைந்துள்ள யூடியூபர் நக்ஷா சரண் & சாண்டி

                                        இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி 'மாஸ்டர்' உடன் இணைந்து 'இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்...' எனும் இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். பிப்ரவரி 23-ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் சோனி மியூசிக் மூலம் வெளியிடப்பட்ட 'இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்...' மகளிர் சக்தியின் வண்ணமயமான கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைந்த பிறகு வேர்களை மறந்துவிடக்கூடாது, தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கவனித்துக்கொள்வது அவசியம், கல்வி மற்றும் தொழில் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் போன்ற அவசியமான செய்திகளை பெண்களிடையே கொண்டு சேர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நடிகையாக விரைவில் தனது திரைப்படப் பயணத்தை தொடங்கவுள்ள நக்ஷா சரண், சாண்டியின் நடன இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலுக்காக அவருடன

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150வது பிரமாண்ட திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) !

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் வெகு சில நடிகர்களில் ஒருவரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் திரைவாழ்வில், சாதனை படைப்பாக பிரமாண்ட பட்ஜெட்டில், அவரது 150 வது படமாக இப்படம் உருவாகிறது.   அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற  ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா,ராஜ்குமார்,  ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில்

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து

சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு. தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் கருணாஸ் தயாரித்துள்ள முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்தப்படத்தின் டீஸரை இன்று மாலை ஆறு மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார். போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும்.

வீரபாண்டியபுரம் விமர்சனம்

லென்டி ஸ்டுடியோ சார்பில் வீரபாண்டியபுரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா சிங், பாலசரவணன், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், சரத் லோகிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜெய், ஒளிப்பதிவு-வேல்ராஜ், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா ஜெய்யும், மீனாக்‌ஷியும் காதலிக்கிறார்கள். மீனாக்‌ஷியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்ள மீனாக்‌ஷி முடிவு செய்கிறார். ஆனால், அதற்கு சம்மதிக்காத ஜெய், பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் நடக்க வேண்டும், என்று கூறி மீனாக்‌ஷியின் தந்தையிடம் அவரை அழைத்து சென்று, நடந்தவற்றை கூறுகிறார். அவரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி, ஜெய்க்கு மீனாக்‌ஷியை திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்வதோடு, திருமணத்திற்கு முன்பு ஜெய்யை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், ஜெய் அவரை கொலை செய்துவிடுவதோடு, அவருடைய தம்பிகளையும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஜெய் யார்? எதற்காக மீனாக்‌ஷியின் குடும்ப ஆண்களை  கொலை செய்கிறார்? என்பது தான் படத்தோட 

நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு உறுதியளித்துள்ளது. Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் Indian Movie Makers சார்பில் PS சம்னாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா மற்றும் இணை தயாரிப்பாளர் PS சம்னாஸ் ஆகியோர் இவ்விழாவினில் பங்கேற்றனர். “மாஹாவீர்யார்” திரைப்படம் வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜு படங்களுக்கு பிறகு நடிகர் நிவின்

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர்

இந்த ஆண்டில் ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்”  படத்தின் அழகான  டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு  நிலவி வருகிறது. இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான மூன்று  பாடல்களும் அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பம்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு,  வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனு

பன்றிக்கு நன்றி சொல்லி' ஹீரோவை நடுநிசியில் விரட்டிய பிளாட்பாரவாசிகள்

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட 'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமாவில் இயக்குனராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிஷாந்த் ரூஸோ, யார் இவர் என ரசிகர்களின் கவனத்தில் பதியும் விதமாக தனது பங்களிப்பை தந்துள்ளார். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோ-விற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018ல் 'ஆண்டனி' என்கிற படத்தில் கதாநாயகனாக சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இயக்குனர் பாலா அரனிடமிருந்து பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் நடிக்கும் அழைப்பு வந்து, ஆடிசனிலும் தேர்வானார் நிஷாந்த் ரூஸோ. தற்போது அந்தப்படத்திற்கு கிடைத்துவரும் பாசிடிவ் விமர்சனங்களால் உற்சாகமாக இருக்கிறார் நிஷாந்த் ரூஸோ. “இந்தப்படத்தில் பல காட்சிகளை யாரும் அறியாதவண்ணம் படமாக்கினோம்.. கோவையில் நள்ளிரவில் பிக்பாக்கெட் திருட்டு ஒன்றை படமாக்கியபோது, இயக்குனர் கட்

Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”

பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார். “நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டார். திரு.அஜித் அந்தரே, COO Viacom18 Studios படம் குறித்து கூறுகையில்.., “Viacom18 Studios

நான் ஐடியா சொல்வேன்.. ஆனால் குறுக்கிட மாட்டேன் ; ஸ்ரீகாந்த் நெத்தியடி பேச்சு

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். "தி பெட்" படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் தங்கம், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் ரஷீக் ஆகியோர் கலந்துகொண்டனர். . தயாரிப்பாளர் வி.விஜயகுமார் பேசும்போது, “இயக்குநர் மணிபாரதி எனது இருபது வருட கால நண்பர்.. பேச்சுவாக்கில் இந்தப்படத்தை ஆரம்பித்து, நல்லப

அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய். தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் 'பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார். இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்.

1 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ஜோதி' டீசர்

வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'ஜோதி'. இப்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர்கள் யோகி பாபு, RJபாலாஜி, ரியோ ராஜ், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி S தாணு, சுரேஷ் காமாட்சி, G.தனஞ்செயன் நடிகை சாக்ஷி அகர்வால் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் 'ஜோதி' படக்குழுவினரை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் 'ஜோதி' டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அறிமுக இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘திரௌபதி, மண்டேலா’ திரைப்படத்தின் நாயகி ஷீலா ராஜ்குமார், ‘கோலிசோடா 2’ திரைப்படத்தின் நாயகி கிரிஷா குரூப், ‘ராட்சசன்’ திரைப்படத்தின் வில்லன் நான் சரவணன் மற்றும் இளங்கோ குமரவேல், மைம்கோபி, சாய் பிரியங்கா ருத் முக்கிய கதாப்பாத்திரத்தில் SP ராஜா சேதுபதி நட

ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல்,  திரில்லர் திரைப்படம் “கூர்மன்”

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல்,  திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை  செய்துகாட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதனை தொடர்ந்து இப்படம் மூலம் மக்கள் தொடர்பாளர்களாக அறிமுகமாகும் பரணி அழகிரி மற்றும் திருமுருகன் ஆகியோருக்கு மக்கள் தொடர்பாளர் சங்கம் சார்பாக டைமண்ட் பாபு தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. இதனை

மூன்றம் பிறை 40 ம் ஆண்டு கொண்டாட்டம்

  விழா சிறப்பு மலரில் வாசகர்களும் பங்கேற்க வாய்ப்பு: பாலுமகேந்திரா நூலகம் அறிவிப்பு 03-02-2022: வணக்கம். சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில் உலகநாயகன் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் 1982 ல் வெளியான மூன்றாம்பிறை தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுல் ஒன்றாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது. . ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்,பிப் பார்க்க வைத்த இந்த பெருமைமிகு திரைக்காவியம் வரும் பிப்ரவரி 19 ம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது .. இந்த பெருமை மிகு நிகழ்வை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம் இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறது .இந்த மலரில் படத்தில் இடம்பெற்ற நடசத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் படத்தை வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம் அதன் பொருட்டு மூன்றம் பிறை படத்தை தியேட்டரில் வெளிவந்த காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப

சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள ‘மகான்’ ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை Prime Video வெளியிட்டுள்ளது

  Prime மெம்பர்கள் இப்படத்தை பிப்ரவரி 10 முதல் Prime Video-இல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணலாம். கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஸ்  பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். ‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மும்பை, இந்தியா- பிப்ரவரி-3, 2022  - ‘மகான்’ -தமிழ் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை Prime Video இன்று வெளியிட்டது, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையிடப்படவுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லரில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகிய பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரி

விறுவிறுப்பான கதைகளத்துடன் பார்வையாளர்களை கவர வருகிறது, ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் "விலங்கு"

  ஜீ5 தளமானது, பல்வேறு வகையிலான கதையுடன் மிகச்சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமிகு ஒடிடி தளமாகியுள்ளது. ஜீ5 யில் வெளியான ஆட்டோ சங்கர், பிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ மற்றும் பல ஒரிஜினல் படங்கள், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளன. தற்போது, ஜீ5 அடுத்ததாக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் "விலங்கு" என்ற ஒரிஜினல் வெப் சீரிஸை, ஃபிப்ரவரி 18, 2022 வெளியிடவுள்ளது. 7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னண

நடிகர் ஷிரிஷ், சிலம்ப விளையாட்டு வீரர்கள், சர்வதேச போட்டியில் பங்குகொள்ள உதவி செய்துள்ளார்

  “மெட்ரோ”  படப்புகழ் நடிகர் ஷிரிஷ் நடிப்பு திறமையில் மட்டுமல்லாது, அவரது நற்பண்புகளுக்காகவும் பரவலாக பாராட்டை பெற்றவர், ஏனெனில் அவர் தொடர்ந்து பல சமூகம் சார்ந்த உதவிகளை செய்து வருகிறார். அவர் இப்போது தமிழ்நாட்டின் இரண்டு சிலம்பம் சாம்பியன்களுக்கு,  சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளை செய்துள்ளார். இதைப் பற்றி பகிர்ந்து கொண்ட ஷிரிஷ், “11 ஆம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக ராஜன் ஆகிய இந்த திறமையான குழந்தைகளைப் பற்றிய செய்தியை ஒரு பரஸ்பர நண்பர் மூலம் அறிந்தேன். அவர்களின் திறமையையும் சாதனையையும்  பார்த்த பிறகு உண்மையில் பிரமித்து போனேன். அவர்கள் பல மாவட்ட மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர். அவர்களிடம் திறமைகள் இருந்தபோதிலும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நேபாளத்தில் நடக்கவிருந்த யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்பது ஏமாற்றமளித்தது. இந்தக் குழந்தைகள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர்களின் பயண மற்றும் தங்கும் செலவுகளை நான் பார்த்துக்கொள்ள முடிவ

பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள விஷ்ணு விஷாலின் "எஃப் ஐ ஆர் (FIR)"

  விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் இயக்குனர் மனு ஆனந்த் பேசியதாவது… 2006 ல் விஷ்ணு விஷாலை சந்திக்க முயற்சி செய்தேன். தயாரிப்பாளர் ஷ்ரவந்தி மூலம் தான் அவரை சந்தித்தேன். விஷ்ணு ஒரு நடிகராக மட்டும் தான் இந்தப்படத்திற்குள் வந்தார். வேறு ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை செய்ய முடியாத நிலை உருவானபோது,  விஷ்ணு சார்

முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் "மனோகரி" படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது

  மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் " சிட்தி " படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் திரையரங்கிற்கு வரவிருக்கிறது " சிட்தி " இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் " மனோகரி " என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராதே மணியின் மகனான ராஜ்குமார் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்திக்கிறார் அவர் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். ஆண்டி இந்தியன் ஜெயராஜ் ,தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - K V.மணி கார்த்திக் ராஜா இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார். எடிட்டிங் - SP அஹமது. கலை - தென்னரசு ஸ்டண்ட் - S.சுரேஷ் நடனம் - ராதிகா தயாரிப்பு ம

சூப்பர் ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்துள்ள MS தோனி

  காமிக்ஸ் பிரியர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், MIDAS Deals Pvt Ltd உடன் இணைந்து Virzu Studios தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலான ‘அதர்வா - தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டது. தன்னிகரில்லாத பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும், இந்நாவலி  தோன்றுகிறார்.  இதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர், முன்னதாக இன்று  MS தோனி  அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். மோஷன் போஸ்டரில் உள்ள தோனியின் முரட்டுத்தனமான தோற்றம், அவரது ரசிகர்களுக்கு அதர்வாவின் உலகத்தைப் பற்றிய ஒரு அற்புதமான பார்வையை அளிப்பதாக அமைந்துள்ளது, மேலும் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் வீரரை  சூப்பர் ஹீரோவாக காட்டியுள்ளது. ரசிகர்களுக்கு காமிக் வடிவத்தில், இதுபோன்ற புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சியில், இதன் படைப்பாளிகள் அதர்வாவின் மாய உலகத்தை உருவாக்க,  பல ஆண்டுகளாக கலைஞர்கள் குழுவுடன் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளனர். இந்த கிராஃபிக் நாவல் ரசிகர்களை முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரபஞ்சத்திற்கு டெலிபோர்ட் செய்யும்.  இதன் கதையை ரமேஷ் தமிழ்மணி எழ

இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி

"மாநாடு" படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். "ரிச்சி" படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். இந்தநிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.. தற்போது சென்

M Studios & Open Screen Pictures வழங்கும், விக்ரம் பிரபு நடிப்பில்,இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”

நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.  சமீபத்தில் இயக்குநர்  முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில்  ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு,  தனது  திறமையை நிரூபித்திருந்தார். இந்த முறை இயக்குநர்  முத்தையா, இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான “டைகர்” படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார். இப்படத்தினை M Studios நிறுவனம் Open Screen Pictures  உடன் இணைந்து தயாரிக்கின்றது. இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில்..,   புலி படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில்  இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில்  உணர்வுப்பூர்வமாக எனக்கு  மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்திற்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பை தரும் அம்சமாக இருக்கும் என்று நான் உறுதிய