முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்கம் சார்பாக சிறப்பு மலர் வெளியிட்டும், சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கியும் விழா நடத்தி மகிழ்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியை ஒரு திருவிழா மனநிலையோடு பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருடன் வருடந்தோறும் விழா நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நடத்த முடியாமல்  இருந்தது.  இந்த வருடம் உறுப்பினர்களின் இரண்டு வருடகால ஏக்கத்தைப் போக்கும் வகையில் இன்று (22.10.2022)  பிரம்மாண்டமாக தீபாவளி சிறப்பு மலர்   வெளியிடப்பட்டு,  ,உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழம்பெறும் பாடகி பத்மபூஷன் திருமதி பி.சுசீலா,  தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு, மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சதீஷ், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், காமெடி நடிகர் 'போண்டா' மணி உள்ளிட்டோர் கலந

சபரிமலை மேல் சாந்தி, "ஶ்ரீ சபரி ஐயப்பன்" திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலையில் வெளியிட்டார்

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் திரைப்படம் "ஸ்ரீ சபரி ஐயப்பன்".  தமிழ் சினிமா வரலாற்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இத் திரைப்படத்தை நட்பின் நூறாம் நாள் திரைப்பட இயக்குனர் ராஜா தேசிங்கு இயக்குகிறார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறக்கூடிய அளவில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் பெரிதும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிகண்ட சாமிகள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை மாலை அணியும் வில்லியாக சோனாவும் படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகம் ராஜாசாமி மிரட்டி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சாம்ஸ் முத்துக்காளை, ராஜேந்திரநாத், உடுமலை ரவி, மங்கி ரவி, வடிவேலு கணேஷ், விஸ்வ காந்த், லதா, சின்னாளப்பட்டி சுகி, சுமதி, ஸ்வேதா

நடிகர் பிரபாசுக்கு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ' புராஜெக்ட் கே' படக்குழு

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ' புரொஜெக்ட் கே'. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அமிதாபச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர்

‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  வாழ்த்து  தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.  ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாஸ் - 'ஆதி புருஷ்' படக் குழு. நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம், தெய்வீகம் ததும்பும் வகையில் அமைந்திருப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணையத்தில் வைரல

மூன்று மொழி.. முத்தான கதாபாத்திரங்கள்... உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார். மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், '' செப்டம்பர் 30-ம் தேதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது. தற்போது 'அம்மு' என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகி

Arete Homes Sky High Tower launched by Prime Lifespaces, makes waves as the heart of North Chennai

Prime LifeSpace has been a reputed real estate consultant & developer firm with 30 years of  experience in the industry. The group is well known in the western region of Maharashtra and northern region of Tamil Nadu namely Chennai, Mumbai, Pune and Alibaug & has successfully completed approximately 1 million SqFt corresponds to over many projects.  Prime LifeSpace is a brand built on trust, transparency & quality in real estate industry. The Brand Prime LifeSpace has established its credentials in development of residential integrated townships & consulting services.Both these segments are equally important to us. Prime LifeSpace consultancy firm is excelled in providing deep expertise to biggest corporates like  Blackstone, Larsen & Toubro, Sunteck for various projects. Also, the group has structured various eminent Joint Ventures in the country. Prime LifeSpace developers are renowned creators of smart integrated townships that provide more  than just

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்லக் நடிக்கும் படம் 'கடமான்பாறை'

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்லக் நடிக்கும் படம் 'கடமான்பாறை'. ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார் மன்சூர் அலிகான்.  ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழ் திரை உலகில் தனது மகனை களமிறக்குகிறார் மன்சூர் அலிகான்.

மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 க்கான மாபெரும் அழகிப் போட்டியில் மிஸ்டர் தமிழகம் பட்டத்தை அருண், மிஸ் தமிழகம் பட்டத்தை அம்ரிதா,மிஸஸ் தமிழகம் பட்டத்தை அபர்ணா உள்ளிட்டோர் தட்டிச் சென்றனர்

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும்  மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022  க்கான  இறுதிச்சுற்றில்  மிஸ்டர் தமிழகம் பட்டத்தை அருண், மிஸ் தமிழகம் பட்டத்தை அம்ரிதா,   மிஸஸ் தமிழகம் பட்டத்தை அபர்ணா ஆகியோர்  வெற்றி பெற்று பட்டங்களை தட்டிச் சென்றனர். இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தற்போது மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 இறுதிப்போட்டியை உலகத்தரத்தில் மிகப் பிரமாண்டமாக சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா  நட்சத்திர விடுதியில் நடத்தியது மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மிஸ்டர் பிரிவில் 30 நபர்களும், மிஸ் பிரிவில் 25 நபர்களும்  மிஸஸ் பிரிவில் 12 நபர்களும் கலந்து கொண்டனர், பாரம்பரிய உடை  மற்றும் வெஸ்டர்ன் உடைகள்  என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்... போட்டியாளர்கள் பாரம்பரிய உடை மற்றும்  வெஸ்டர்ன் உடைகளை அணிந்து அன

புதிய தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் Bizpire Expo 2022 வணிகம் தொடர்பான கருத்தரங்கு

புதிய தொழில் முனைவோர்களுக்கு  வழிகாட்டும் Bizpire Expo 2022 வணிகம் தொடர்பான  கருத்தரங்கில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், சுரேஷ் போரா,  AZPIRE  நிறுவனத் தலைவர் விஜயராகவன், ஆதித்யாராம் ப்ராப்பர்ட்டீஸ்ன் தலைவர் மற்றும் நிறுவனர் ஆதித்யாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வணிகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தொழில்முனைவோர்களிடம் கலந்துரையாடினர். Bizpire Expo 2022 என்கிற தொழில்முனைவோர் களுக்கான வணிகம் குறித்த கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  கிரௌன் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. BNI AZPIRE  நிறுவனத்தின் தலைவர் விஜயராகவன்  தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், சுரேஷ் போரா,ஆதித்யாராம் ப்ராப்பர்ட்டீஸ்ன் தலைவர் மற்றும் நிறுவனர் ஆதித்யாராம் BIZPIRE EXPO 2022  நிகழ்ச்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்... இந்த   அரங்குகளில் AZPIRE  தொழில் முனைவோர் உறுப்பினர்களின் தயாரிப்புகள் 70 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  வணிகம் குறித்த  கருத்தரங்கை  நல்லம்மை,மீரா நாகராஜன்,மது சரண்,வீணா குமாரவேலு  ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்..

WayCool creates 7500+ sqft tricolor with fresh vegetables 

~The Grand Indian Food Flag Installation consisted of various varieties of vegetables weighing approx 20 tons as a part of Har Ghar Tiranga Campaign~ ~Entire produce was donated to Akshaya Patra foundation~  Chennai, August 14 th , 2022:  In commemoration of the 75th Independence Day - Azaadi ka Amrit Mahotsav, WayCool Foods, India’s leading food and agri-tech platform today created a first-of-its-kind food flag installation spread approx 7632 sq.ft near its Distribution Centre at Kannamangala, Bangalore. The food flag was symbolic of India's successful transformation from a food scarce to a food surplus nation and a journey to become a food powerhouse for the world. It is also one of the largest producers of fruits and vegetables in the world. The fruits and vegetables being used in the creation of the flag were distributed to The Akshaya Patra Foundation immediately after the event. A refreshing take on the Har Ghar Tiranga Campaign, WayCool successfully recreated the tri-colors

South India Schools Cricket Associations அமைப்பின் தலைவரான ஜான் அமலனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன்

South India Schools Cricket Associations  அமைப்பின் தலைவராக ஜான் அமலனுக்கு  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...  இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறை வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு  அளித்ததற்கான indian Awards 2022 விருதினை விளையாட்டுத்துறை  அமைச்சர் சிவ.மெய்யநாதனுக்கு  விஜய் வசந்த் எம்பி  மற்றும் ஜான் அமலன் ஆகியோர் இணைந்து வழங்கினர்*  இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்  (South India Schools Cricket Associations) அமைப்பு  தொடங்கப்பட்டுள்ளது.  இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று(16/08/22) செவ்வாய்க்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கிரிக்கெட் அசோசியேஷன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டார்.  *தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்  சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்*  *(South India Schools Cricket Associations)

மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு NGL அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் நிகழ்ச்சி நடிகை லதா, தேவி கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது

பழம்பெரும் நடிகைகள் கலந்து கொண்ட,NGL  அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி பழம்பெரும் நடிகை  ராஜசுலோச்சனா அவர்களின் 88வது பிறந்தநாளை  முன்னிட்டு திநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில்  நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு  விருந்தினர்களாக 1960,1970 கால திரைத் துறையைச் சார்ந்த மூத்த  நடிகைகள்  ஸ்ரீமதி  லதா, லட்சுமி பாய்,ALS ஜெயந்தி, சுஜ்ஜரித்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்  மேலும் நிகழ்ச்சியில்  பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்   NGL அறக்கட்டளையின் சார்பாக மறைந்த மூத்த நடிகையும்  நடன கலைஞருமான ராஜசுலோசனாவின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை நினைவுகூறும் வகையில் அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்படத்தக்கது.   இந்த நிகழ்ச்சியின்போது NGL  அறக்கட்டளை சார்பாக நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அபிஷேக்,ஜெயஸ்ரீ  ஆகிய இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும்  வழங்கப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் பன்முக நடிகைகளின் திரைப்படம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Multidisciplinary Team at Promed Hospital Saves Poly-Trauma Patient with 10 Fractures Due to a Major Road Accident

Chennai,  2022:  A 35-year-old man from Chennai was brought to Promed Hospital in an unconscious state with laboured breathing. He is the sole breadwinner of the family with two kids residing near Kovalam on ECR road. He is working in a private restaurant in ECR as a system administrator. On 16th March 2022, around 5 pm while on his way to home on a two-wheeler, he met with a major road traffic accident near Kovalam. He had collided with a lorry. He was rushed to Promed hospital for emergency treatment.  On arrival, the Patient was attended by the Critical care team. On examination, the patient had maxillary bone fractures, his upper set and lower set of teeth were broken. Another CT scan of his face showed a fracture of the inferior nasal spine and a lacerated upper lip, His intubation was difficult since he had multiple fractures. Completing the basic blood investigations, he was found to have high blood pressure, difficulty in breathing and he was put on a ventilator. A multidiscipl

BHANGRA PUNJABI inaugurated by Actor Jeeva at Mayajaal

BHANGRA PUNJABI OPENED at Mayajaal back Chennai serving authentic punjabi home food. Its serve food with love and all our chefs are from the North. Be it the cholle Bathurst the butter chicken the kulchas the paneer the Lassi.Its the true taste of punjab. At present relocated to the main road outside the mayajaal out gate and also operating from annanagar.  COME TRY OUT FOR AUTHENTIC PUNJABI FOOD SERVED WITH LOVE

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகும் நடிகை மாலாஸ்ரீயின் மகள்

மறைந்த பிரபல கன்னட தயாரிப்பாளர் ராமு மற்றும் பிரபல சீனியர் நடிகை மாலாஸ்ரீ ஆகியோரின் மகள் ராதனா ராம் முதன்முதலாக கன்னட திரையுலகின் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன் ஜோடியாக ‘D56’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூரில் உள்ள ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆசிரமத்தில் வரலட்சுமி பண்டிகை நன்னாளில் நேற்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கேமராவை சுவிட்ச் ஆன் செய்து இந்த படத்தின் முதல் ஷாட்டை துவங்கி வைத்தார். ராக்லைன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். ராபர்ட் பட புகழ் தருண் சுதிர் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்த நிகழ்வின்போது பேசிய சீனியர் நடிகை மாலாஸ்ரீ, “கன்னட திரை உலகில் முதன் முதலாக அறிமுகமாகும் எனது மகள் ராதனா ராமுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் மீடியாக்களும் தங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அளிக்க வேண்டும்... ராக்லைன் வெங்கடேஷ் என்னுடைய படம் மூலமாக தயாரிப்பு துறையில் நுழைந்தார். இன்று எனது மகள் அவ

ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான 'மாமனிதன்' எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, 'ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்' என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் 'டோக்கியோ திரைப்பட விருது' எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த 'டோக்கியோ திரைப்பட விருது' சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டோக்கியோ திரைப்பட விருது , ஆசியாவின் சிறந்த படமாக 'மாமனிதன்' தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு தங்க பதக்கம் வழங்கப்

ஆகஸ்டு 19ல் வெளியாகும் மேதகு-2

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்பட தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாக பணிபுரிந்துள்ளார்கள். சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழர்களுக

Chennai’s finest tex-mex diner, Jango’z is now open in Royapuram

~ Brand launches an exclusive Jango’z app to offer consumers a seamless dining experience from the comfort of their homes ~ Chennai, 6 th August, 2022:  Jango’z, the finest tex-mex diner in Chennai, today launched its second outlet in the city. Located in Roypauram, the newly launched  Jango’z outlet is spread across 1400  sq.ft offering a wide variety of juicy burgers and piping pizza by slice.With an invigorating ambience, the outlet is designed with an exclusive ‘Jango’z Parambarai’ comic strip offering a wholesome dining experience for the foodies. From its delicious popcorn chicken burgers to refreshing beverages, customers also now enjoy these fresh offerings with the newly launched Jango’z App. Commenting on the launch Mr. Manuranjith Ranganathan, Director – Retail, CavinKare, said, “We are delighted to bring our signature delicacies  to Royapuram and are happy that the foodies here get to experience our delectable spread. We have created a wholesome dining experience for the cu

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்

  அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, இணையும், ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்திய திரைப்படமான ‘ஏஜென்ட்’ படத்தின் மாஸ், ஸ்டைலிஷ் மற்றும் அதிரடி டீசர் வெளியிடப்பட்டது. திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து இவ்வாண்டின் மிக முக்கியமான திரைப்படமான ஏஜென்ட் படத்தின் தமிழ் மற்றும் கன்னட மொழி டீசரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முறையே அகில் மற்றும் மம்முட்டி இதன் டீசரை வெளியிட்டனர். இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மகாதேவாக நடித்துள்ள நடிகர் மம்முட்டி அவர்களின் பார்வையில் இந்த டீசர் காட்டப்பட்டுள்ளது. ஒரு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர், 'ஏஜென்டின்' தைரியம், வீரம் மற்றும் கணிக்க முடியாத தன்மையை பற்றி கூறுகிறார். அவன் மிகவும் தைரியமான, தீவிரமான தேசபக்தன். அவனைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்று கூறுகிறார். அவரது மரண அஞ்சலி ஏற்கனவே எழுதப்பட்டதாக அவர் கூறுகிறார். காதலி அவனை, ‘வைல்ட் சாலே’ காட்டுப்புலி என்று அழைக்கிறாள். ‘ஏஜென்ட்’ பற்றிய ஒ

சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்  “கனா காணும் காலங்கள்”  தொடருக்காக,  இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம்  பாடல்

  ‘கனா காணும் காலங்கள்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சென்னை, ஜூலை 15, 2022: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும்,  “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கை நிறைந்த  பள்ளி நினைவுகள் போற்றும்  ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு    சிறந்த இசை இயக்குநர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார், பிரபல பாடலாசிரியர் ஜி.கே.பி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல்  பள்ளி வாழ்க்கையின் அழகிய தருணங்களை நினைவுபடுத்தும், மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த பாடல், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ தொடர்  வெறும் நிகழ்ச்சி என்பதை தாண்டி பள்ளி வாழ்வி

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் “மாமனிதன்”

  தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் சீனு ராமசாமி  பேசியதாவது… கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்த காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றி தான். திரையரங்குகளில் இந்தப்படம் நன்றாகவே போனது ஆனால் அதன் லாபம் என்பது தொக்கி நின்றது, அந்த நேரத்தில் தான் ஆஹா ஓடிடி வந்தது. அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரு

நடிகர் ரக்‌ஷன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

  பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ்  நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது. கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி  மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்,  டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இர

சீயான் விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

  சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார்.  இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 'சீயான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். 'இசை

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தொடக்கம்

  நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை

“ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பம்

  வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் S. P. ஹோசிமின் . பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர். இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro, மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் "சுமோ" விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது. இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் , மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க மற்றும் மைம் கோபி , மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள். பிரமாண்ட பொருட்செலவில் பரபரப்பான திரைக்கதையில்

தளபதி விஜய் மஹால் திறப்பு விழா

  திருச்சி மாவட்டத்தில் வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் புதிதாக திறந்து தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய ‌‌மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பால்கேன் 5நபர்களுக்கும் சில்வர் பாத்திரம் 30பேர்க்கும் வேட்டி 40பேருக்கும்  சேலை 60பேருக்கும்  மளிகை பொருட்கள் 80பேருக்கும்  பள்ளிகுழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் 50பேருக்கும்  மரக்கன்றுகள் 50பேருக்கும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்துex.mla அவர்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் அணி தலைவர்கள் நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் தளபதியின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The Red Box group launches “The Green Box” - a Pure Vegetarian Indo-Chinese Food On-The-Go & Restaurant model

  India, 12th July 2022: The Green Box is a well-planned concept by The Red Box group to target a new set of audience with an aim to have a similar brand connect to The Red Box. Keeping in mind the universal colour codes: Green standing for Vegetarian and Red standing for non-vegetarian – The Green Box stands Pure, Tasty & Green - inside & out! The Red Box is a well-established brand that is much-loved by people of different groups, societies and across different cities. With its success, the group is proud to launch “The Green Box”: a Pure Veg Indo-Chinese food on-the-go concept with a dine-in model incorporated. The primary goal of The Green Box is to cater to people who are strictly Vegetarian and prefer the kitchen also to be fully Vegetarian as well. Same quality and taste of The Red Box, The Green Box too is quick, tasty and a value for money. Although the group’s USP is Tasty Food On-The-Go, The Green Box also has a seating capacity to accommodate up to 20 people. An int

நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”

  Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது.., மஹா திரைப்படம் ஒரு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பந்தத்தை கூறும் படம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாப பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் சிறப்பான திரைப்படத்தையும், ஒரு முக்கியமான கருத்தையும் தந்துள்ளார். நடிகர் சிம்பு சிறந்த நட

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் சிவி 2

  சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள். சிவி 2 திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வெளியிடுகிறார்.இவர் இதற்கு முன்பாக சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார் இதை தொடர்ந்து விரைவில் படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

  கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும்,  ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். 96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். CS பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார்.

‘சினிமா தான் என் உயிர்’ = சீயான் விக்ரம் உருக்கம்

  ஏ ஆர் ரஹ்மானின் மாயஜால பின்னணியிசைக்காகக் காத்திருக்கிறேன் = இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின்பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர். விழாவில் இ

சிறப்பான வளர்ச்சியில் சென்னை ரியல் எஸ்டேட் துறை

  சொத்துகள்   வாங்க   இது   சரியான   தருணம்  –  கிரடாய்   அறிவிப்பு   சென்னை, ஜூலை 13–கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய நிலையில் வணிக மற்றும் குடியிருப்பு சொத்துகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே சொத்துகள் வாங்க இது சரியான தருணம் என்று கிரடாய் அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்த இந்த துறை தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வருவது என்பது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. எனவே, இப்போது வணிக கட்டிடங்கள், வீடுகள், பிளாட்டுகள் வாங்குபவர்களுக்கு இது சரியான காலக்கட்டமாகும் என்று கிரடாய் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் தெரிவித்தார்.     மேலும் அவர் கூறுகையில், தற்போது வீடுகள் அல்லது பிளாட்கள் வாங்குவதற்கு இது சரியான தருணம் ஆகும். இன்று கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் குறைந்த விலையை இனி வரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாது.   மொத்த கட்டுமான செலவில் ஸ்டீல், மணல், சிமெண்ட் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் செலவானது 65 சதவீதம் வரை ஆகிறது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு