முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் 2022 மார்ச் 25 உலகம் முழுதும் வெளியாகிறது

நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் ‘டான்’  படத்திற்காக மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வண்ணமயமான மோஷன் போஸ்டருடன் வந்த முதல்  அறிவிப்பு, அதைத் தொடர்ந்து படத்தில் பங்குகொள்ளும் நட்சத்திர நடிகர்களின் அணிவகுப்பு, அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசைக்கொண்டாட்டத்தை தந்த, முதல் சிங்கிள் 'ஜலபுல ஜங்கு' பாடல் என இப்படத்தின் ஓவ்வொரு அம்சமும் படத்தின்  எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. தற்போது  இறுதியாக, தயாரிப்பாளர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டனர் ஆம்! சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டான்” திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘டாக்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி  ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்து, உலக ரசிகர்களின் விருப்பமிகு படமாக உருவாகியுள்ள 'டான்'  திரைப்படத்திற்கான வர்த்தக வட்டாரத்தில்  பெரும் எதிர்பார்ப்பையும், மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் படத்தின்  அழகான கெம

சாதிப் பிரச்சினைகள் பற்றி பேச வரும் சாயம்.‌. பிப்ரவரி 4 முதல் திரையரங்குகளில்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'தாழ்த்தப்பட்ட ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே கொலை செய்த குற்றத்திற்காக' என தொடங்கும் ட்ரைலரே இந்த படம் பரியேறும் பெருமாள், காலா, ஜெய்பீம் வரிசையில் இடம்பெறும் என படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் த

ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது

பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைபடமான –‘மகான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே, அதிகம் எதிர்பார்க்கபட்ட சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ சற்று முன்பு வெளியிட்டது. பரபரப்பான இந்த டீசர் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும். மனதைக் கவரும் கதைக்களத்தோடு  அதிரடிச் சம்பவங்கள் நிறைந்த “மகான்’ உலகத்தின் ஒரு பார்வையை அறிமுகப்படுத்துகிறது. நட்பு, போட்டி ,மற்றும் விதியின் விளையாட்டின் சம்பவங்கள் பின்னிப்பிணைந்த ஒரு விறுவிறுப்பான கதை விவரிப்பை  இந்த டீசர் மூலம் எதிர்பார்க்கலாம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு சாதாரண மனிதனையும், அவனைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள்… அவனை மட்டுமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றுவதை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்துகிறது. வாழ்வில் உண்மையான தந்தை = மகன் உறவை கொண்ட ஜோடியான  விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் முதல் முறையாக   ‘மகான்’ .படத்தில் இணைந்து தோன்றுகிறார்கள்.   அவர்களுடன் முக்கியமான பாத்திரத

ஆஹா தயாரிப்பில், கவின் ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள “ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

பிரபல நடிகர் ஆர்யா வெளியிட்ட ரோம்-காம் வலைத் தொடரான,  கவின்-ரெபா மோனிகா ஜான் நடித்த,  “ஆகாஷ் வாணி” தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் பொழுதுபோக்கு நிறைந்த, ஒரு  ஜாலியான  காதல் கதை இது என்பதை சொல்வதாக அமைந்திருக்கிறது, ஆனால் இயக்குனர் எனோக் ஏபிள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு மகிழ்ச்சியான ஜாலி ரொமாண்டிக் பயணம் என்பதை சொல்ல  மட்டுமே ஆனால் உண்மை அதுவல்ல என்று கூறுகிறார். இணைய தொடர் முழுமையான உணர்வுகளை வெளிக்கொணரும், மேலும் தொடரை பார்க்கும் எவருக்கும் இதயத்தை அதிர வைக்கும்  உணர்வைத் தரும். ஒரு இணைய தொடரை ரோம்-காம் வடிவில்  பரிசோதிப்பதில்  மிகுந்த ஆர்வமுடன்  இருப்பதாகவும் இயக்குனர் மேலும் கூறியுள்ளார், இந்த வகை வெப் சீரீஸ் தமிழில் வருவது  இதுவே முதல் முறை. சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'லிஃப்ட்' திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம், பெரிய அளவில் பாராட்டுக்கள் குவித்த நடிகர் கவின், இந்த வலைத் தொடரில் நாம் தினமும் சந்திக்கும் எதிர் வீட்டு அழகான இளைஞனாக நடிக்கிறார், ரெபா மோனிகா ஜான் அவரது காதலியாக நடிக்கிறார்.

“காவல்துறை உங்கள் நண்பன்” திரைக்குழு “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புதுவகை ஜானரில் முதல்முறையாக “பி.ஈ. பார்” (B.E. BAR) திரைப்படத்தை உருவாக்குகிறது

காவல் துறை உங்கள் நண்பன் திரைப்படம்  அதன் தீவிரமான கருத்து, ஈர்க்கும் கதை அமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புத நடிப்பிற்காக  அனைவராலும் பெருமளவில்  பாராட்டப்பட்டது. இந்த திறமைமிகுந்த திரைக்குழுவினர், “பி.ஈ. பார்”  (B.E. BAR)  என்ற தலைப்பில் தங்கள் இரண்டாவது திரைப்பட பயணத்தை தற்போது துவக்கியுள்ளனர்  இந்த் குழுவின் முந்தைய திரைப்படம் நமது மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்தது, ஆனால் இந்த இரண்டாவது படைப்பு , முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புது ஜானரில் உருவாகவுள்ளது. இக்கதையின் மையம்  பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை  சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக சதுரங்க வேட்டை புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்

நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ்வில் வெளியீடு

சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி இப்படத்தை தயாரித்துள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் விருதுகளை அள்ளிய ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரையுலகினர் உள்ளிட்ட தரப்பினரின் பாராட்டுகளை ஏற்கனவே பெற்றுள்ளது. தற்போது ரசிகர்களின் பார்வைக்காக சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக அமைந்துள்ளது. பணியில் இருந்து ஓய்வை நோக்கித் தள்ளப்படும் ஒருவரின் வாழ்வில் வேலையில்லாத இளைஞர் ஒருவரை சந்தித்தவுடன் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே ‘நரை எழுதும் சுயசரிதம்’. சமீபத்தில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் விஷால் வெங்கட் இப

ஆக்ஷன் திரில்லர் படமான 'மகான்' படத்திலிருந்து துள்ளலான கானா பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'மகான்'. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. 'எவன்டா எனக்கு கஸ்டடி..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'யெவ்வர்ரா மனகி கஸ்டடி..' என்றும், மலையாளத்தில் 'இனி ஈ லைப்ஃபில்..' என்றும், கன்னடத்தில் 'யவனோ நமகே கஸ்டடி..' என்றும் வெளியாகியிருக்கிறது. சீயான் விக்ரம் நடித்த 'மகான்' படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்ல

மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அம்மா.. பாடல். ஹிட் ஆன ‘கணம்’ படத்தின் ஆன்மாவான ‘அம்மா’ பாடல்

ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலி க்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி  ‘கணம்’ படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருப்பது சிறப்பம்சம். வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’. அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் சர்வானந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கணம்’. ‘அம்மா’ பாடலில் உமா தேவியின் வரிகளுக்கு, ஜேக்ஸ் பிஜாய் தனது இசையின் மூலம் உயிரோட்டி இருக்கிறார். சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் கேட்பவர்களை மயக்கியுள்ளார். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில்.., “அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முது

“தி வாரியர்” திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை புரிந்திருக்கிறது

இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும்  எதிர்பார்க்கப்படும்  படங்களுல் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார், மேலும் இரு மொழிகளில் உருவாகும்  இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது. தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் சரியாகத்தான்  படித்தீர்கள், இது 16 கோடி ரூபாய் தான், இது ராம் பொதினேனி திரை வாழ்வில் ஒரு உச்சமான சாதனை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொதினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார். தி வாரியர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன. இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'ரேக்ளா' படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டார்

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ரேக்ளா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். 'வால்டர்' படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் 'ரேக்ளா'. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' படத்தின் டைட்டில் லுக், இணையவாசிகளிடமும், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. https://youtu.be/XFvDYHjNjf8

யாரோ ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படம்

TAKEOK PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. யாரோ ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் ஆகும், இது ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை. ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை TRIDENT ARTS சார்பில் R. Ravindran வழங்குகிறார். இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வெங்கட் ரெட்டி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகி வரும், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்   தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது… ‘யாரோ’ திரைப்படம், ஐடி துறையில் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெங்கட், சினிமா ஆசையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சந்தீப் சாய் அழகாக இயக்கியிருக்கிறார். இப்படத்தை பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிடுகிறோம் உங்களுக்கு பிடிக்கும் ஆதரவ

Namma Madurai Sisters: A Brand-New Fiction Show Is All Set For Its Grand Launch on Colors Tamil from 21st Feb, 2022 at 7 PM

Chennai, 27 th  January 2022:  Famed for the magnificent Meenakshi Amman Temple, the delectable Jigarthanda and the aromatic  Malli,  Madurai ,  the land of culture and traditions, is all set to unveil another pristine symbol.   Building on these famed elements,  Colors Tamil, the fastest-growing GEC of Tamil Nadu, is sure to find itself among these legendary icons, with the grand premiere of its brand-new fiction show  Namma Madurai Sisters,   produced by SNS Movies , starting  21st February, 2022 at 7pm. The channel has now unveiled an intriguing promo showcasing the journey of these four sisters. Orphaned at a young age, the promo puts forth their struggle through the years, eventually leading them to become successful, sheerly through hardwork and grit. Unraveling an inspirational saga of strife, bonding and sisterhood amidst familial rivalry,  Namma Madurai Sisters is all set to entice the audiences, and offer a roller-coaster ride of emotions, from Monday to Saturday

65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த 'துரிதம்' படக்குழுவினர்

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.  கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிபையும் நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்தின் கதை விறுவிறுப்பாக நகரும் விதமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் விதமாக படத்திற்கு 'துரிதம்' என்றே தலைப்பும் வைத்துள்ளனர். எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சீனிவாசன். இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை

நட்டி - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் 'வெப்'

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் 'வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். 4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார். 'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' படத்தின் நாயகி ஷாஸ்வி பாலா, 'முந்திரி காடு' & 'கண்ணை நம்பாதே' படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். காட்பாதர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய அருண் சங்கர் கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். 3 ப

Etcetera entertainments தயாரித்துள்ள “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது

நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR  கௌரவ  பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்க்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை,  Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.  தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை  (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியு

7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி

மெகா பட்ஜட்டில் தயாரிக்கும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன்!! இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர். நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும்  தெரிவித்துள்ளார். மிகப் பெரிய பட்ஜட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு,  மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளத

“ஏஜென்ட் கண்ணாயிரம்” படத்தில் நாயகியாக நடிக்கிறார் நடிகை ரியா சுமன்

   நடிகை ரியா சுமன் தமிழ் திரையுலகில் நடிகர்  ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் மூலம்,  தன் திரைப்பயணத்தை துவங்கினார்.  தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் நாயகியாகவும் மற்றும்  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும்  ‘மன்மத லீலை’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்` முக்கியமான  இந்த இரண்டு படங்களிலும்  ஒரு பகுதியாக பங்குகொண்டு  இருப்பதில், அவரது திறனை வெளிப்படுத்த அருமையான  வாய்ப்பை இந்த படங்கள் வழங்கியுள்ளதில், அவர் வெகு உற்சாகமாக இருக்கிறார்.  ஏஜெண்ட் ஸ்ரீவஸ்தவா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவலாக உருவாகும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்காக இயக்குநர் மனோஜ் பீதா தன்னை அணுகியபோது, அதன் அசல் பதிப்பைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்றும், ஏனெனில் அந்த பாத்திரத்தின் தாக்கம் தன்னுள் ஏற்படுவதை விரும்பவில்லை என்று நடிகை கூறியுள்ளார், கிட்டத்தட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு,  அசல் பதிப்பை பார்த்த போது,  துப்பறியும் நபரின் உதவியாளராக இருக்கும்  கதாபாத்திர தன்மையை தவிர, அசல் பாத்திரத்திற்கும், இந்தப்பட பாத்திரத்திற்கு எந்த ஒற்

பெரும் வரவேற்பை குவித்து வரும் Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல்

பொங்கல் பண்டிகையையொட்டி இசை ரசிகர்களுக்காக, Think Music  தனது புதியஆல்பம் பாடலான ‘கரக்கி’ பாடலை வெளியிட்டது. வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த பாடல், ரசிகர்களிடம்  அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சுயாதீன ஆல்பம் பாடலை அடிக்ரிஸ் இசையமைத்துள்ளார் மற்றும் மிகவும் பிரபலமான நாட்டுப்புற கலை குழு ஜோடிகளான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர்  இப்பாடாலை பாடியுள்ளனர். அழகான இசை, பாடகர்களின் அற்புதமான குரல், நடிகர்களின் திறமை மிகுந்த  நடிப்பு ஆகியவை பாடலுக்கு அருமையான வரவேற்பை பெற்று தந்துள்ளது. கிராமத்து திருவிழாவின் போது ஒரு பையனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை முன்மொழிவது போன்ற இனிமையான மற்றும் கவர்ச்சிகரமான கருவினை  இப்பாடல் கொ ண்டுள்ளது. தலைசிறந்த ஒளிப்பதிவும், அற்புதமான நடன அமைப்பும் இந்தப் பாடலை, ஒரு சிறந்த சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. Think Music  பல்வேறு கருக்களில்  வித்தியாசமான களங்களில் பாராட்டுக்குரிய வகையிலான, சுதந்திரமான ஆல்பம் பாடல்களை இசை ஆர்வலர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த

பெல் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் குரு சோமசுந்தரம்

மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில்  கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம். பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற  பார்வைத் திறனற்ற தனிநபரின் கதையே Bell.  பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை.    இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில்  உருவாகியுள்ளது.  Brogan movies    தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்  ராபர்ட் இசை அமைத்திருக்கிறார் பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பரணிகண்ணன் கதை வசனம் வெயிலோன். திரைக்கதை இயக்கம் R வெங்கட் புவன். திரைப்படத்தை புரோகன் மூவிஸ் தயாரித்துள்ளது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பீட்டர் சக்கரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்கரவர்த்தி இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

“ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகளுடன் களமிறங்கும் விஜய் ஆண்டனி

Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியி உருவாகும் “ரத்தம்”  படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள்! மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா & ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் “ரத்தம்”  படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோடியில் ஒருவன்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் திரைத்துறை மதிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரது திரைப்படங்களுக்கான வணிக வட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அவரது அடுத்தடுத்த பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக  இருக்கும் நிலையில், ரத்தம் என்ற தலைப்பில் திரைப்படத் இயக்குநர் CS அமுதனுடன் (தமிழ்ப்படம்  புகழ்) அவர் நடிக்கும் படத்தின் மீது  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவி

பாராட்டுக்களும், மாநில விருதுகளும் பெற்றவர் அரிச்சல் முனை படத்தின் இயக்குனர் எஸ்.குமார்

அரிச்சல் முனை படத்தின் இயக்குனர் எஸ்.குமார் கேரளாவில் மிகச் சிறந்த கதை, திரைக்கதை ஆசிரியர், மலையாளத்தில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதி, பாராட்டுக்களும், மாநில விருதுகளும் பெற்றவர்! தமிழ் மீது கொண்ட பற்றால், "கடத்தல்காரன்" என்ற படத்தை தமிழில் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி வெளியிட்டார்! தற்போது அரிச்சல் முனை படத்தை தமிழில் இயக்குகிறார்! இவரின் கதை, திரைக்கதை என்பதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது! இதை தொடர்ந்து தமிழில் பல படங்களை இயக்கும் வாய்ப்பு, இவர் வைத்திருக்கும் கதையை வைத்து கிடைத்துள்ளது! தொடர்ந்து எஸ்.குமார் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளிவர உள்ளது!

வேலம்மாள் மாணவர் தேசிய அளவிலானஓவியப் போட்டி- 2021ல் சாதனை படைத்தார்

 மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 7-ஆம் வகுப்பு மாணவி டோனெட்டா டி சாஜு, 'ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உலகம்' என்ற தலைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஓவியப் போட்டியான  'ஃபீட் பை ஆர்ட்' 2021-ல் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளார்.  இந்தத் தேசிய அளவிலான ஓவியப் போட்டியை "நெய்பர்ஹுட்" என்னும் அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.  மாணவி டொனெட்டா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள போட்டியாளர்களுடன் போட்டியிட்டு தனது ஓவியத்திறனை நிரூபித்தார்.  இவரது சாதனைக்குப் பள்ளி  நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்திய நிலப்பரப்பின் கடைசி சாலையில் நடைபெறும் திகில் படம் ‘அரிச்சல் முனை’ பூஜையுடன் துவங்கியது

தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சியோடு உருவாகும் படங்களுக்கு என்றுமே வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளது ‘அரிச்சல் முனை’. இந்திய நிலப்பரப்பின் கடைசி சாலையான தனுஷ்கோடி அரிச்சல் சாலையில் நடைபெறும் திகில் சம்பவத்தை வித்தியாசமான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் உருவாக இருக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘கடத்தல்காரன்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.குமார் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக உருவாகும் ‘அரிச்சல் முனை’ படத்தை கலாஞ்சலி சினிமாஸ் நிறுவனம் சார்பில் அனில் கலாஞ்சலி தயாரிக்கிறார். இப்படத்தில் நாயகன், நாயகியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் யார்? என்ற தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் முத்துக்காளை

41-year-old woman with congestive cardiac failure undergoes successful keyhole valve replacement surgery at Fortis Malar

~ Tamil Nadu CM’s Comprehensive Health Insurance scheme saved the mother of two ~ Chennai: 11, December 2021: The cardiac surgery team headed by Dr. Thejaswi N Marla at Fortis Malar Hospital performed a challenging surgery through a minimally invasive heart procedure to get the patient’s damaged mitral valve replaced with a mechanical valve. The 41- year-old female patient, mother of two children, from a financially weaker background, got a second lease of life at Fortis Malar Hospital under Tamilnadu Chief Minister’s Comprehensive Health Insurance Scheme. At the time of admission, the patient was suffering from multiple comorbidities with severe tightness in the main valve with severe leak in all other valves and pulmonary hypertension (PAH) with congestive cardiac failure. The patient’s complications began when the heart was no longer pumping efficiently leading to pressure in the artery carrying blood to lungs and consequently leading to kidney and liver failure. The criticality of

Genelia Deshmukh reveals her skin and haircare resolutions for 2022

~ A daily dose of Evion ® Forte in her nourishment is Genelia’s perfect solution to heal the aftermath of the holiday festivities as she enters the new year~ Chennai, 11 January 2022: Having just concluded the holiday season and year-end festivities, reality hits hard as one begins to witness dull skin and damaged hair. As the new year marks another opportunity to start afresh and be a better version of yourself, why not start the year by vowing to take good care of your hair and skin? The year-end stress of planning and attending celebrations, holiday travels, coupled with the constant usage of face masks has led to a lot of struggles in maintaining our skin and hair. At some point we have all have slept with our makeup on, or gorged on greasy food, which isn’t in the best interest of our overall appearance. Moreover, pollution is worse in the winter months, which heightens the risk of damage. So, as we ring in the new year, it’s time for us to take extra care of our skin and hair.