முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிசப்தம் திரைப்படத்தில் ர.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி இடையிலான பொருத்தத்தைப் பாராட்டும் இயக்குனர் ஹேமந்த் மதுகர்

ர.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோரை நீண்ட காலத்திற்குப் பிறகு ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு-தமிழ் த்ரில்லர் நிசப்தம்மில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டு தமிழ்படம் ரெண்டுவில் இணைந்து நடித்த இவர்கள், மீண்டும் இணை சேர்ந்துள்ளனர். ஒரு வெளிப்படையான உரையாடலில், இயக்குனர் ஹேமந்த் மதுகர், படத்தில் அனுஷ்கா மற்றும் மாதவன் மீண்டும் இணைவது பார்வையாளர்களுக்கு இந்த த்ரில்லரைப் பார்ப்பதன் ஒரு கூடுதல் போனஸாகத் திகழும் என்பதை வெளிப்படுத்தினார். அவர், “ஆரம்பத்தில், அவர்கள் முன்பு ஒரு படம் செய்தார்கள், 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு ஊமையாக இருக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தையும், இசைக்கலைஞராக நடிக்கும் மாதவனின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான உற்சாகத்தைப் பார்த்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒருவர் அழகானவர், மற்றவர் கியூட்டானவர், ஒன்றாக அவர்களது பல்திறன் நடிப்பும் இணைய, அவர்களிடையே திரையில் காணப்பட்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார். ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள

‘BORN IN BHARAT’ – Pride of the PAST, Growth for the PRESENT,and Vision for the FUTURE!

  ~ More than 4000 professionals and enthusiastson a collective effort towards ‘Nation Building’ Conceptualised and carefully curated by Seshu Karthik - an Entrepreneur by heart, the campaign revolves around building a better Nation for tomorrow with a collective effort from each one of us. ‘BORN IN BHARAT’ started as a single idea of bringing people together for the Nationand evolved into a broader holistic initiative considering the past, present, and future. It aims to function in three stages - take pride of the past glories of the country, drive growth for today’s progress, and create a vision for a stronger tomorrow. Launched on 14 th September 2020. The campaign instantly caught the eyes of the citizens and earned more than 3500 tweets on the launch day. It was national trending on Twitter for 3-4 hours. It has taken the approach to Empower Individuals to build an Empowered Nation. ‘BORN IN BHARAT’ was launched in association with Bhumi Organization and Young Indians Chennai.

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ - நடிகர் ராதாரவி

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ! நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம்! டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, திரு எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது. மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி ரிலீஸ்

வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் ,  இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்- 19  ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட  ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான  புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது. அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள் ,  டிவி நிகழ்ச்சிகள் ,  ஸ்டாண்ட்-அப் காமெடிகள் ,  அமேசான் ஒரிஜினல்ஸ் ,  அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை ,  இந்தியா முழுவதும்   தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி ,  டாப்டீல்களை உடனடியாக பெறுதல் ,  பிரைம் ரீடிங்கில்   வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ. 129  ரூபாயில் ப

தமிழகத்தில் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

 தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி புறநகர்ப் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது  கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும் அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், கட்டுப்பாடுகளுடனும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது - தமிழக அரசு

திரையரங்கிற்காக நடித்த படங்கள் ஓடிடியில் வெளியாகும் போது முதல் கொஞ்சம் வருத்தம், பயம் இருந்தது - மாதவன்

  ஹேமந்த் மதுகர் இயக்குநர் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிசப்தம்’. அக்டோபர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து மாதவன் அளித்துள்ள பேட்டி: 14 ஆண்டுகள் கழித்து அனுஷ்காவுடன் நடித்த அனுபவம்? ‘இரண்டு’ படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார் அனுஷ்கா. சினிமாவுக்கு புதுசு. 14 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால், அதே அழகு தான். சினிமா மீது அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா என்று கேட்டுத் தெரிந்துக் கொள்வதை எல்லாம் பார்த்த போது ரொம்பவே பெருமைப்பட்டேன். ரொம்ப அற்புதமான நடிகையாகிவிட்டார். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பெரிய நடிகையாகிவிட்டார். எந்த பந்தாவும் இல்லாமல் இருக்கிறார். ‘நிசப்தம்’ அனுபவங்கள்? இந்தக் கதை என்னிடம் வரும் போது முதலில் வசனங்களே இல்லாத ஒரு படமாக வந்தது. த்ரில்லராக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் வசனங்கள் வைக்கலாம் என்று சேர்த்தோம். அதுவும் கொஞ்ச வசனங்களே இருக்கும். சலோ ப்ளேயராக நடித்துள்ளேன். அதற்காக சலோ கற்றுக் கொண்டேன். அதை வாசிக்க இல்லாமல், சரியாக நடிக்க கற்றுக் கொண்டேன்.

புதுமுகங்களின் அணிவகுப்பில் உருவாகி இருக்கும் குற்றப் பின்னணி கொண்ட பழிவாங்கும் கதை "பிறர் தர வாரா "

சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர் . ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார்." யார் அவர்கள் ? எதற்காக இதில் ஈடுபட்டார்கள் என்பதை கேட்டதும் இன்னும் அதிர்ச்சி அவருக்கு அதிகமாகிறது " இப்படி விறுவிறுப்பாக செல்லும் கதைக்கு ஏ.ஆர்.காமராஜ் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை எழுதி நறுக்கான வசனம் தீட்டி தனது ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து  ஸ்பெஷல் ஆபீசர் வேடமேற்று அருமையாக இயக்கி உள்ளார். சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ் ,  சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் நடித்துள்ளனர். கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. டேவிட் - கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர். திரையரங்குகள் திறந்ததும்  திரையிட தயாரிப்பாளரும் இயக்குனருமான

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க கேயார் கோரிக்கை

எஸ்பிபி மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்பிபி அவர்களின் மறைவுக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார். எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட. நன்றி கேயார் 27-09-2020 விஷாலை போல் அதிரடி காட்ட விரும்பும் அறிமுக நாயகன் ஹரிஷ்(Harish)

விஷாலை போல் அதிரடி காட்ட விரும்பும் அறிமுக நாயகன் ஹரிஷ்(Harish)

'குழந்தை' என்ற குறும்படத்தின் மூலம் இணையத்தில் உலாவும் இளைய தலைமுறையினரை கவர்ந்திருப்பவர் நடிகர் ஹரிஷ். இவர் தற்போது தயாராக இருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக இயக்குனரின் வேண்டுகோளை ஏற்று உடற்பயிற்சி, நடனம், சண்டை காட்சி ஆகியவற்றில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார். இவரை சந்தித்து கொரோனா சூழலில் தமிழ் திரை உலகில் அறிமுகமாவது குறித்து கேட்டபோது,'' தமிழ் திரை உலகில் நடிகனாக வேண்டும் என்பது என்னுடைய பால்ய காலத்து கனவு. பள்ளிக்கு செல்லும் காலகட்டத்தில் பள்ளிகளுக்கிடையே  நடைபெறும் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பரிசுகளை வாங்கியிருக்கிறேன்.  யாரையும் எளிதில் கவர்ந்து விடும் தோற்றப்பொலிவு இருந்ததால், என்னுடைய நண்பர்களும், உறவினர்களும்,' உன்னால் திரைத்துறையில் சாதிக்க இயலும். செங்கல்பட்டில் பிறந்த நீ சாதனையாளராக உயர்வாய்' என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இத்தகைய உந்துதலால் நான் தொடர்ச்சியாக திரைப்படங்களை பார்ப்பதும், நடிப்பில் என்னை ம

ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதை “வெற்றி”

ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை  இயக்கவுள்ளார். தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி  நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது.... இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது மனதிற்கு நெருக்கமானது, மிகவும் உணர்வுப்பூர்வமானது. இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத

அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது

மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12   பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன் ,  நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தியாவிலும் 200   க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது  Breathe: Into The Shadows  அசல் தொடரை ,  மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம். சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் ,  தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ,  ஸ்டாண்ட்-அப் காமெடி ,  அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங் ,  அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல் ,  இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி ,  முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி ,  பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும்  ₹129  கட்ட

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில்

2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் அவர்களின் இந்த திரைப்பயணம் பெரும் வெற்றி சரித்திரம். இதுவரை தமிழ்நாடு முழுதுமாக 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார் அதில் உச்ச நட்சத்திரங்கள் அஜித்குமார், விஜய், தனுஷ், மற்றும் பலரின் படங்களும் அடங்கும். இந்நிறுவனம் மூலம் முதல் முறையாக திரை உரிமையை பெற்ற ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் பிரமிப்பு தரும் வெற்றியை பெற்று பெரும் லாபத்தை தந்தது. இந்த வெற்றி பயணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த “ மேயாத மான்” படத்திலும் தொடர்ந்தது. 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள உச்ச நட்சத்திரத்துடன் “வீரம், விவேகம்” படத்திலும் இணைந்தது. மேலும் “ஆடை, மகாமுனி, கொலைகாரன், கோமாளி, சிந்துபாத், அசுரன், பெட்ரோமாக்ஸ் மற்றும் நான் சிரித்தால்” என பல வெற்றிபடங்களை மட்டுமல்லாது விமர்சகர்களும் பாராட்டிய பல படங்களை தொடர்ந்து தந்த 2019 ஆம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும். ரசிகர்

Roposo welcomes Alisha Abdulla, India’s first female racing champion to the Roposo Pride of India program

Roposo welcomes Alisha Abdulla, India’s first female racing champion to the Roposo Pride of India program Roposo, India’s No. 1 short video app welcomes Alisha Abdullah under the highly successful 'Roposo Pride of India' program. The program recognizes remarkable Indians by providing them with a platform to mentor and inspire fellow Indians. Alisha, India’s first female national racing champion truly embodies the characteristics of a legend of a champion, on and off the racetrack. India is a land of many talents. Many Indians have made it big in their chosen field and many more are waiting to be discovered. Roposo believes that each of us has an innate talent that needs a bit of inspiration and a platform to shine.      The Roposo Pride of India was launched in July 2020 with Babita Phogat, Neel Ghose, Sangram Singh & Shooter Dadi has already garnered over 50 Lakh video views. In continuation of the program, Alisha Abdullah will be sharing videos of her journey

படப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர்

பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளப் பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் 14 வது படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிக்கிறார் .இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.  இசை - நிவாஸ்  கே பிரசன்னா.  நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் ஆன்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் எஸ் பி பி யின் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் . கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார் – நடிகர் ராஜ்கிரண்

கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார் - நடிகர் ராஜ்கிரண்

எஸ்.பி.பாலசுப்ரமணியன் அண்ணன், கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார்... ஆகஸ்டு மாசம் 5 ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று, ஒரு காணொளி வெளியிட்டார். அதில், "மிக மிக சிறிய அளவிலான தொற்று தான். வீட்டிலேயே தனிமையில் இருந்தாலே சரியாகிவிடும். ஆனாலும், என் குடும்பத்தினருக்கு எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதால் தான், மருத்துவ மனைக்கு வந்து விட்டேன், வெகு சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன்" என்று, மிகுந்த நம்பிக்கையோடும், தெளிவாகவும் பேசியிருந்தார்... ஆனால் இன்று...அவர் நம்முடன் இல்லை... இந்த இழப்பை தாங்க முடியவில்லை. அண்ணனின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன்... - நடிகர் ராஜ்கிரண் படப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர்

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி - பாரதிராஜா

 பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை - பாரதிராஜா. தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரம ணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார் ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் இருமல் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000 அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு இந்திய அரசின் உயரிய விரு துகளான பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்ற இசை மேதை அவர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத் தான் பார்த்தார்கள் தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்பி பால சுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர் எம்ஜிஆர் என் டி ராமாராவ் ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்

CO-RADS-6க்கு சவால்விட்டநோபல் மருத்துவமனை

சென்னை, 25 செப்டம்பர் 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54 வயதான திருமதி.ஹேமாவதி அவர்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிரமான அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரம் ஏற்பட்ட நிலையில், பிற மருத்துவமனைகள் இயலாமையால் கைவிரித்த போதும் தனது நம்பிக்கையை கைவிடவில்லை. தனது உடல்நிலை99%ஒத்துழைக்கக்கூடிய நிலையில் இல்லை மற்றும் உயிர்பிழைக்கும் வாய்ப்பும் பெரிதாக இல்லை என்று தெரிந்த போதிலும் அவர் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. சென்னை, புரசைவாக்கம், நோபல் மருத்துவமனையில் அவர் தானாக வந்து சேர்ந்து, அதிதீவிர நிலையில் சிகிச்சைப் பெற்று, இப்போது கோவிட்டிலிருந்து முற்றிலுமாக குணமாகியுள்ளார். வென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் தன்னை குணப்படுத்திக் கொள்வதில், அவர் மிகவும் உறுதியாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். https://youtu.be/3krrbc-o1Qc நோபல் மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை டாக்டர் பாலாஜி ரவில்லா பாஸ்கரன்,

His voice will live on as we cherish his songs for years to come. May his soul rest in peace

S.P Balasubramaniam was a legend in the entertainment arena. A irreplaceable legendary singer. A truly gifted artist who had mesmerised millions around the globe with his singing. He sang over 40,000 songs throughout his career and it comes as a shock and great sadness to many that he has left us all so suddenly.  His voice will live on as we cherish his songs for years to come. May his soul rest in peace. YB M Kula Segaran Ipoh Barat MP Former Minister of Human Resources (Malaysia)

உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் பாலு சார் - STR

எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க... காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள... உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர். என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது. அதைப்போல... "காதல் அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் "இவன்தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சா

எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் கண்ணீர் அஞ்சலி - பிரசிடெண்ட் அபூபக்கர், இந்திய ஹஜ் அசோசியேஷன்

இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து வெற்றிக்கொடி நாட்டிய நல்ல நண்பர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். உலகின் பல மொழிகளில் தன் இசை மொழியால், வசீகர குரல் கொண்டு வசியம் செய்தவர். மொழிகளை, இனங்களைக் கடந்து இசையால் அனைத்து இதயங்களையும் ஒன்றிணைத்த ஒரு இதயம் இன்று மௌன கீதம் இசைக்கிறது. குழந்தைச் சிரிப்பும், குதூகலமும் காண்போரை எல்லாம் ஈர்த்து இழுக்கும் வல்லமை கொண்ட இசை வாலிபனை இழந்து நிற்கிறோம். 25 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பயணித்து அனைத்து விஷேசங்களிலும் பங்கேற்றவர். அவரது இழப்பால் இசையை மட்டுமல்ல நல்ல நட்பையும் இழந்து நிற்கிறேன். பாடும் நிலா இன்று படுத்து உறங்குகிறது, பாட்டுடைத்தலைவன் பாடல் மறந்து இன்னொரு உலகில் பயணிக்கிறார். இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்பது எஸ்பிபியின் வெறும் குரலாக மட்டுமல்ல, குறளாகவும் எதிரொலிக்கிறது. இந்த உலகம் உள்ளவரை, இசை உள்ளவரை ராஜ தீபம் ஏற்றி வைத்த எஸ்பிபி எனும் தீபம் அணைவதில்லை. அவரை இழந்து வாடும் ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். இப்படிக்கு, பிரசிட

Shri Shri Ravishankar gets candid about his spiritual journey with Rangaraj Pandey on Sinthanaigal Simplified

~ Tune into COLORS Tamil on Sunday, 27th  September 2020 at 11:00 AM to watch the conversation unravel ~ Chennai, 25 th  September 2020:  Filled with interesting anecdotes, watch Shri Shri Ravishankar unravel the finer details of his spiritual journey in a soulful conversation with journalist-actor Rangaraj Pandey on this week’s episode of COLORS Tamil’s Sinthanaigal Simplified. Ranging from spirituality to everyday hurdles, this week’s episode is filled with thought-provoking conversations. As Rangaraj Pandey picks Guurdev’s brain on balancing emotions and pragmatic thinking, we give you three reasons to tune into COLORS Tamil this Sunday, 27 th September 2020 at 11:00 AM.  Beginning of a journey:  With Gurudev sharing fascinating stories from his childhood days about his spiritual awakening, Rangaraj Pandey questions him on the various challenges he had faced as he set upon hisspiritual journey. As Gurudev candidly responds, he takes Rangaraj Pandey through various instances in his l

நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக 56 நாட்களிலேயே முடிக்கப்பட்டது - ஹேமந்த் மதுகர்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும்  வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார். “முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது மற்றும் படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள் தான். மேலும்  முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாட்களில்  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் என பகிர்ந்து கொண்டார். செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். போலிஸ்  இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர்.  கடைசிவரை

குமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் T. ராஜேந்தர் தமிழக முதல்வருக்கு வேண்டுக்கோள்

  கொரோனா வைரஸ் தொடங்கியது முதல் குமரியில் சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் ,நடைபாதை வியாபாரிகள் ஆறு மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த கஷ்டத்தையும் துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர் ..ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளும் கடை வைத்திருப்பவர்களும் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகி கஷ்டப்பட்ட வண்ணம் உள்ளார்கள் ..இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி சிறந்த சுற்றுலா தலமென்பதால் அதன் மூலம் வரும் வருமானத்தையும் அரசு இழந்து வருகிறது .ஆகவே துயரத்தின் உச்சத்தில் இருக்கும் நடைபாதை வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் சுற்றுலா பயணிகளும் சந்தோசப்படும் விதமாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தை தொடங்குவதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.. கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்  மாண்புமிகு தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் போது வியாபாரிகள் அனைவரும் விளக்கேற்றி தங்களுடைய வாழ்விலும்   விளக்கேற்றுங்கள் என்று முதல்வரின் கவன ஈர்ப்புக்கு  கொண்டு செல்ல வேண்டுமென PT செல்வகுமார் கூறியிருந்தார்.. அந்த கருத்தையும் ஆதரிக்கிறேன்  என்று லட்சிய தி