முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக பசித்தவர்கள் தினம்: ஏழை மக்களுக்கு ரெயின்ட்ராப்ஸ் இலவச உணவு

உலக பசித்தவர்கள் தினம் என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியை தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பியிருக்க தேவையில்லை. மக்கள் ஒவ்வொருவரும் சமூகத்தை நோக்கி தங்கள் பங்களிப்பை அளித்து பசித்தவர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கும் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தை கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக ஆஸ்கர் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி   இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார். ரெயின்ட்ராப்ஸ் மற்றும் அனீபா பிரியாணி இணைந்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. சென்னை க

DAC Developers Unveils ‘DAC Prathyangira’ with 163 Luxurious Residential Apartments at Sholinganallur

Chennai, May 27, 2023 DAC Developers, one of Chennai’s most trusted developers, is all set to launch ‘DAC Prathyangira’, an upscale luxurious 163 residential apartments in Sholinganallur. ‘DAC Prathyangira’ boasts 12 residential floors and a magnificent rooftop clubhouse spanning 10,000 sq ft.  Situated in the heart of OMR on 80-ft road, this meticulously designed property offers a picturesque view of the Buckingham canal. It comprises a diverse range of unit configurations, including: spacious 2, 3 BHK apartments and penthouses. The units start from 1258 sq ft and ranges up to 3007 sq ft. Pricing for these apartments starts from Rs. 93 lakhs. Bookings for these exquisite units will start on the 2 nd , 3 rd  and 4 th  of June, 2023. Located less than a kilometre away from the revered ‘Sri Prathyangira Devi’ Temple, this project marks the 101st construction endeavour of DAC Developers. As the construction progresses steadily, the basement work is currently nearing completion

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. எஸ். சுரேஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராம்சரந்தேஜ் லபானி மேற்கொண்டிருக்கிறார்.‌ படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசமான ஆடைகளை வடிவமைக்கும் பணியினை தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா கையாண்ட

நினைவிருக்கா (திரை வடிவில் ஆல்பம் பாடல்)

நினைவிருக்கா அன்பே நினைவிருக்கா இடமிருக்கா நெஞ்சில் இடம் இருக்கா… என்ற பாடல் காட்சி திரைப்பட வடிவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் நிஜய், கதாநாயகி ஜாராவை விரும்புகிறான். ஆனால் அந்தப் பெண் அவனை விரும்ப முடியாத சூழ்நிலை. காரணம் என்னவெனில் தன்னுடைய பெற்றோர்கள் ஊனமுற்றவர்கள் என்பதால் அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள் என்பதை நாயகன் நிஜய் உணர்ந்து கொள்கிறான். அதே நேரத்தில் மற்றொரு பெண்ணான அன்வித்தாவின மானத்தை காப்பாற்றுகிறான்.அதன் காரணமாக அன்வித்தாவிற்கு நாயகன் நிஜய் மீது காதல் கொல்கிறாள். இதை அறிந்து நிஜய் தான் நேசித்த அவள் கிடைக்கவில்லை, எனவே தன்னை நேசித்த அவளை நிஜய் ஏற்றுக் கொள்கிறான் இந்த கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு பாடல் காட்சியில் ஒரு கதையை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது வலைதளத்தில் வெளிவந்து பல்வேறு ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நாயகனாக நிஜய் நடிக்க நாயகிகளாக ஜாரா, அன்வித்தா நடித்திருக்கின்றனர். இந்த கதையசம் கொண்ட பாடல் காட்சியை இயக்கியவர் ஊ.குமரவேல். இயக்கம்- ஊ.குமரவேல் தயாரிப்பு- லைவ் ஆர்ட்ஸ் மேக்கர்

A.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான “பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா

பிரியமுடன் ப்ரியா என்ற திரைப்படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது படமான பிரியமுடன் ப்ரியா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. நடிகர் அசோக் குமார், நடிகை லீசா நடித்துள்ள இந்த படத்தை A.J சுஜித் இயக்கி உள்ளார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தேனிசைத் தென்றல் தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் S.கதிரேசன், R.ராதாகிருஷ்ணன் இணைச்செயலாளர் செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் N. விஜயமுரளி, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பட நாயகர்கள் அசோக், லிசா ஆகிய இருவருக்கும் எம்.எல்.ஏ. த..வேலு பொன்னாடை போர்த்தினார். படத்தின் நாயகன் அசோக் மேடையில் பேசுகையில், திரைப்பிரபலங்கள் அமர்ந்திருக்கையில் மேடையில் கீழே விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் நடிகர் அசோக் இது குடும்ப விழா கொண்டாட்டமாக உள்ளது. இந்த படத்துக்கு பாடல் அருமையாக அமைந்து

‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திருக்கும் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா

நடிகை ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்! ’தி மிஸ் ஹைதராபாத் 2018’ வென்ற இளம் நடிகையான ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஒரிஜினல் தொடரான ’மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’வாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பேசு பொருளாக உள்ளார்.   ராஜு முருகனால் தழுவி, எழுதி, இயக்கப்பட்ட முதல் அத்தியாயம் ‘லால்குண்டா பொம்மைகள்’. இதில் மென்மையான இதயம் கொண்ட டாம்போயிஷ் பெண்ணாக அவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சென்னைப் பெண்ணின் பாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியாவின் சரியான தோற்றம், தன்னிச்சையான மற்றும் இயல்பான நடிப்பு போன்றவை பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கண்கள் வழியே வெளிப்படுத்தும் நடிப்பு, சாமர்த்தியம் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் என அவரது நடிப்புத் திறமையை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். ‘ரைட்டர் பத்மபூஷன்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த விமர்சனங்களைப் பெற்ற இவர், இப்போது தென்னிந்தி