முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா

சுசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா. கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:- “சாம்பியன்” படத்தில்  என் நடிப்பை பார்த்து பிடித்து விட்டு KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் சார் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும். நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன். அவரிடம் ‘மீம்’ பற்றி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்,என்றார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைப்பெற்று வருகிறது. தயாரிப்பு: கோமளா, ஹரி பாஸ்கரன் நிறுவனம்: KH picturs

The Laughing Budda Premium Boutique Tattoo Studio of Mallika Angela unveiled by Fashion Photographer G.Venkat Ram & Actress Upasana RC at Alwarpet

Laughing Budda Tattoo Shop owned by Actress, Tattoo Artist and Body Positivity Influencer Mallika Angela Chaudhuri, opened its second branch in Alwarpet TTK Road, right off First Cross Street. The launch went spectacularly well with people from all facets of society joined in to welcome the new Tattoo Shop.  The main highlight of the event was that Mr G Venket Ram’s Tattoo photoshoot that occurred during the lockdown was unveiled on large four foot canvas prints by Actress Upasana RC. Mr G Venket Ram was the guest of honor and stated, “I am so happy to be a part of this launch and the unveiling of these photographs because we are becoming part of a huge change and of course to be here for her second Tattoo Shop as well!”   Laughing Budda Tattoo Shop Alwarpet is a boutique studio catered to the tattoo lovers of the city and also teaches the art by taking onboard up to three apprentices or students at a time.     Amongst the crowd was Actress Prerna Khanna and Shubbha; many bloggers and

தனக்கான அடையாளத்தை உருவாக்கும் ஜான் கொக்கன்

அனைத்து சினிமா ரசிகர்களாலும், சினிமாக்காரர்களாலும் நன்கு அறியப்பட்டவர் ஜான் கொக்கன். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார். 10 சிறந்த மாடல்களில் ஒருவராக முன்னேறினார். அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர், அலெக்சாண்டர் தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில், அஜித்தின் வீரம், விஷாலின் மதகதராஜா, சிம்பு நடித்த ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ், மலையாளம் மொழி மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் பிரம்மாண்டமாக வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் வில்லனாகவும், பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது அதிகம் எதிர்பார்க்கும் கே.ஜி.எஃப் 2 ஆம் பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினி

தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் மாடல் அழகி!

இன்று தலை சிறந்த நடிகைகளாக கோலோச்சும் பல நடிகைகள் முதலில் தமிழில் அறிமுகமானவர்களே... ஐஸ்வர்யா ராய் முதல் ப்ரியங்கா சோப்ரா வரை இதில் அடக்கம். அந்த வரிசையில் கரிமா தத் எனும் இந்த மாடல் அழகியும்  தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் பாலிவுட்டில் 100 க்கும் மேற்பட்ட பிரின்ட் ஷுட்களை முடித்துள்ளார். தற்போது நல்ல தைரியமான, பெண்களை மையப்படுத்திய  அல்லது நல்ல கதையம்சம் கொண்ட காதல் கதாபாத்திரம் வந்தால் அவர் தமிழில் நடிக்கவிருக்கிறார்

சில்க் ஸ்மிதா பாணியில் சோனா

இதுவரை கவர்ச்சி நடிகையாகவே வலம்வந்த சோனா முதல்முறையாக கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடிக்கும் புதிய படம் BTK பிலிம்ஸ் தயாரிப்பு வரும் சிவப்பு மனிதர்கள் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் , மீனாட்சி சர்க்கார், புதுமுகம் சத்யா, அனு கிருஷ்ணா, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு, ஆதிஷ் பாலா, பெஞ்சமின், வேல்முருகன், வம்சம் தொலைக்காட்சித் தொடரில் பூமிகா கேரக்டரில் நடித்த சந்தியா, லேகா ஸ்ரீ, உமா, மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தில் 1980,1990 காலகட்டங்களில் தவிர்க்கமுடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை 1981 வெளிவந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கவைத்து வியக்க வைத்தார்   அந்த வழியில் இந்த காலகட்டத்தில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை மிரட்டி வந்த சோனா முதல்முறையாக சிவப்பு மனிதர்கள் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி அன்பு சரவணன் இயக்கி வருகிறார்   இணை தயாரிப்பு S.N. சுரேஷ் B.com தயாரிப்ப

ICSI - The Institute of company Secretaries of India

Chennai, 20 th February 2021: The Institute of company Secretaries of India (ICSI) has its headquarters at New Delhi and four regional offices at New Delhi, Chennai, Kolkata and Mumbai. The Institute has 72 Chapters across India. ICSI has two overseas centres at Dubai, UAE and NewYork, USA. The Institute under “Sabka Saath Sabka Vikas” has also signed MoUs with various universities/colleges in tier 2 and tier 3 cities where chapter offices are not present for establishing ICSI Study Centres, to guide students. Shri Nagendra D. Rao, President and Shri Devendra V. Deshpande, Vice President of the Institute of Company Secretaries of India (ICSI) while addressing a press conference today stated that “ICSI has taken various initiatives including extensive career orientation, professional development programs, brand building, ICSI Digital revolution, Recognitions, Expanding Boundaries, Initiatives for Members, Initiatives for Students, Academic Collaborations, Social Initiatives, Fee waivers

வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ள கணேசாபுரம்

கணேசாபுரம் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில்  P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக  இயக்குனர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில்  நாயகனாக புதுமுகம் சின்னாவும்  நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன்  ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது... மதுரை மண்ணின் மையமாகக்கொண்ட இத்திரைப்படம் 90's காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான  கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம்.   இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்து உள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம் அதேபோல்   இசையமைப்பாளர் ரா ஜா சாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்

அடர்ந்த காட்டில் படமாகும் ஒட்டம்

பிறந்த நாள் கொண்டாடும் நிகழ்ச்சி தொகுப்பாளினி "Television queen" திவ்யதர்ஷினியின் அடுத்த பரிணாமம்

ஒவ்வொரு துறையிலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் Darling of Television என வர்ணிக்கப்படும் திவ்யதர்ஷினி, அவர்கள் இன்று தன்னுடைய பிறந்த நாளை சிறப்பித்து வருகிறார். அவர் இது போன்று பிறந்தநாள் பார்டிகளை கொண்டாடியதில்லை, அவருக்காக அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்த இக்கொண்ட்டாட்டம் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி கரமாக அமைந்துள்ளது. பல பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இத்துனை ஆண்டுகளாக ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தன்னை நேசிப்பது பக்க பலமாக இருப்பது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. மேலும் தற்போது சில படங்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க அடுத்தடுத்து உள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார் டிடி .

'வணக்கம் தமிழா' சாதிக் இயக்கத்தில் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் திரைப்படம்...

வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் 'வணக்கம் தமிழா' சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் படம் புரொடக்ஷன் நம்பர்-1.  இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை 'ஜீவி' பட புகழ் பாபுதமிழ் எழுதுகிறார்.  அஜய் வாண்டையார், 'கன்னிமாடம்' ஶ்ரீராம் கார்த்திக் மற்றும் VJ பப்பு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தொகுப்பை 'பியார் பிரேமா காதல்' புகழ்   மணிகுமரன் சங்கரா மேற்கொள்கிறார். ஒளிப்பதிவு இனியன் ஜே. ஹாரிஸ்.   இத்திரைப்படம் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாக்கப்படவுள்ளது.    மார்ச் மாதத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அவரவர் உணவு அவரவர்க்கு ஒசத்திதான்

மாட்டுக்கறியை கொண்டாடும் முற்போக்கு சமூகத்தினரில் பலர் கூட பன்றிக்கறியை நுகர்ந்ததில்லை... பன்றிக்கறியிலுள்ள அரசியலையும் , வாழ்வையும் கொத்துக்கறிப்போட்டு #சேத்துமான் என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறது நீலம் புரொடக்சன்ஸ் Neelam Productions அறிமுக இயக்குனர் #தமிழ் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார். கேரளா பிலிம் பெஸ்டிவலில் பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் துவங்கி வைத்திருக்கிறது. பேசுவதென்று முடிவெடுத்தபின்பு அனைத்தையும் பேசிவிடுவது நல்லது. பன்றிக்கறியும் நமது உணவே..! பேசுவோம். heart-warming response at International Kerala Film Festival. #seththumaan #IFFK2021 Directed by #Thamizh Produced by #PaRanjith

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா டீசர்

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் திரு. செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். எப்போதும் தனது தனித்துவமான நடிப்பால் மக்களை கவரும் அவர் இம்முறையும் புது முயற்சி எடுத்துள்ளார். "அங்காடித் தெரு" "அசுரன் " ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற இயக்குனர் A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார் மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் "யாமா" திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் ஏற்கனவே வெளியாயிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.

பிரமாண்ட “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா

நடிகர் நாகர்ஜீனா,  இந்தியாவில்  இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில்  தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு, பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த வருட இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து வகையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள், மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இப்படம் தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தின் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜினா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ள

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல்

தென்னிந்திய திரையுலகின் இசை பிதாமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில்  இணைந்துள்ளார்.  இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,  பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.  ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில்  25 மில்லியன் ப

திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை - ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தினா, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்ப்பது என்பதே நல்ல அனுபவம். டூரிங் டாக்கீஸ்களில் படம் பார்த்த அனுபவங்களை மறக்க முடியாது. அப்படிப்பட்ட திரையரங்கங்கள் இன்று காணாமல்

Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில் அடுத்த ரொமான்ஸ் திரைப்படம் “Walking/Talking Strawberry Ice Cream “

நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைந்து தங்களது  Rowdy Pictures தயாரிப்பு நிறுனத்தின் சார்பில் அடுத்த தயாரிப்பாக  “Walking/Talking Strawberry Ice Cream “  எனும் ரொமான்ஸ் திரைப்படத்தினை  தயாரிக்கிறார்கள். நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கியுள்ள Rowdy pictures தயாரிப்பு நிறுவனம்,  ஆரம்பிக்கப்பட்ட  மிகக்குறுகிய  காலத்தில், தமிழ் சினிமாவில் பலரது புருவத்தையும் உயர்த்தும் அளவில் பல ஆச்சர்ய அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஒரு புறம் “ராக்கி” மற்றும் “கூழாங்கல்” போன்ற அழுத்தமான தீவிர சினிமாக்களின் உரிமையை பெற்று உலகளவில் எடுத்து செல்லும் பணியினை செய்து வருகிறது. மற்றொருபுறம் ரசிகர்களை மயக்கும் கமர்ஷியல் சினிமாக்களாக “நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல்” படங்களையும் உருவாக்கி வருகின்றது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக  இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் “நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம்” படங்களில் பணிபுரிந்த  உதவியாளர்  வினாயக்  அவர்களின் அறிமுக இயக்கத்தில்   “Walking/Talking Strawberry Ice Cream “ எனும் ரொமான்ஸ் திரைப்படம் உருவாகிறது. இப்படம் முழுக

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் - ஆனந்தி நடிக்கும் “நதி”

கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக M.S.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகி

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் "அழகிய கண்ணே".படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்னேஹா பிரிட்டோ . இவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 12 தேதி அழகிய கண்ணே படத்தின் பூஜை போடப்பட்டது.பிரிட்டோ அவர்களின் மனைவி விமலா பிரிட்டோ அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 15 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது . பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் I.லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி தொழில்நுட்பக்குழு : இயக்கம்  - R.விஜயகுமார் தயாரிப்பு - சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்) பாடல்கள் - வைரமுத்து இசை - N.R.ரகுநந்தன் ஒளிப்பதிவு - A.R.அசோக் குமார் படத்தொகுப்பு - சங்கத் தமிழன் நடனம் - ராதிகா தயாரிப்பு மேற்பா

அப்பா - மகள் அன்பின் அழகியலை வித்தியாசமாகச் சொல்லும் விறுவிறுப்பான த்ரில்லர் 'அன்பிற்கினியாள்'

அப்பா - மகள்  இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. அந்த வரிசையில் இந்தப் புதிய படத்தின் கதையும், களமும், காட்சிகளும் புதிய கோணத்தில் இருக்கும்  என்று நம்பலாம். ஏனென்றால் அப்பா - மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா - மகள் நடித்தால் எப்படியிருக்கும்...? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும்   உணர்வுப்பூர்வமாக இருக்கும். அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா-மகள்  கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக்குழு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு 'அன்பிற்கினியாள்' என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்க

சமூக அக்கரை உள்ள படங்களை மட்டுமே இயக்க வந்துள்ளேன். பெண்களை தவறாக சித்தரிக்கும் படங்களை நான் எடுக்க வரவில்லை

முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை இயக்குனர் செரா .கலையரசன் இயக்குகிறார் . காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக  நடிகை ஆரா இணைந்து நடிக்கிறார் . பிரபல இசையமைப்பாளர் DM உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும்  தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள் . இப்படத்திற்கான பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார் . ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது . இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது . இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர் . மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி , இயக்குனர்கள் RV உதயகுமார் , பேரரசு ,ஜாக்குவார் தங்கம்  மற்றும்  நீட் தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை  சபரிமாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் . ஊர்வசி பேசியவை : பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார் .அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன். படக்க

பேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; 'டிக்டாக்' படத்தில் த்ரில் சம்பவம்

ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் 'டிக்டாக்'. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். 'எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக  டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன்  இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். மிகப்பெரிய மால் ஒன்றில் scary house எனப்படும் பேய்வீடு செட் அமைத்து பார்வையாளர்களுக்கு ‘த்ரில்’ வழங்கும் வேலையை செய்து வருகின்றனர் நாயகனும் நாயகியும். இந்த வீட்டில் நிஜமான பேய் ஒன்று நுழைவதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளையும் காமெடி, த்ரில் என கலந்து படமாக்கியுள்ளார்கள். பேய்க்கான பிளாஸ்பேக்கும் இதுவரை சொல்லப்படாத ஒன்றாக இருக்கும் இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்

வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்! உற்சாகத்தில் மிதந்த குழந்தைகள்!

'வேலன்டைன்ஸ் டே' என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்! ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி. தான் நடித்த 'குட்டி ஸ்டோரி' படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 'நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார். அவரிடம் பேசினோம்... '' 'வேலன்டைன்ஸ் டே'வை  உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத

கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில் சமூக பிரச்சனையை சொல்லும் படம் "மீண்டும்"

"அஜித்" நடித்து மாபெரும் வெற்றி பெற்ற " சிட்டிசன்" மற்றும் சினேகா நடித்து பரபரப்பாக பேசப்பட்ட " ஏ.பி.சி.டி." ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் ஷரவணன் சுப்பையா. இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு " மீண்டும் " படத்தை இயக்கி உள்ளார். இவர் படத்தை பற்றி கூறியதாவது. "மீண்டும்" ஒரு சமூக பிரச்சனைக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்துள்ளார். இதன் உண்மையை தேடி போகும் ஹீரோவுக்கு குடும்பம், உறவு , வாழ்க்கை என்று வெவ்வேறு கோணங்களில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகிறது. இவைகளிலிருந்து ஹீரோ 'மீண்டும்' தன் சகஜநிலைக்கு வந்தாரா  இல்லையா?  என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்சன் என்று சரியான  விகிதத்தில் கலந்து சொல்லும் படம் தான் 'மீண்டும்'. 'மீண்டும்' திரைப்படம் மார்ச் மாதம் உங்கள் கண்களுக்கு விருந்தாக தியேட்டரில் வெளிவரும்." என்று சொன்னார். கதிரவன் , அனேகா, ஷரவணன் சுப்பையா.

Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு

11.2.2021 அன்று சென்னை எக்மோரில் எத்திராஜ் காலேஜ் எதிரில், இசை வல்லுநர் Dr.குமரன்  அவர்களின் Street Snacc  ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் உதயமாகியுள்ளது. இவ்வுணவகத்தின் உரிமையாளர், இசை வல்லுநர் Dr.குமரன்  அவர்கள் ஒரு டிரம்மர் மற்றும் தாளவாசிப்பாளர் ஆவார். பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ராஜேஷ் வைத்யா, மணி ஷர்மா, சாம் CS  ஆகியோர் உட்பட பலருக்கும் பின்னணி வாத்தியங்கள் வாசிப்பதில் முன்னணி இசை வல்லுநராக விளங்க கூடியவர். மேலும் 50 மணி நேரம் தொடர்ந்து டிரம் இசைத்து, சாதனை புரிந்து, ஆசியா, இந்தியா, தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து  தனித்தன்மை மிக்க கலைஞராக அறியப்படுபவர். இவர் UK Records University  யினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுதும் இசை நிகழ்ச்சிகளுக்காக பயணித்தபோது, பல விதமான உணவுவகைகளை முயன்று பார்த்ததன் விளைவாக,  Street Snacc உணவகம் இன்று உதயமாகியுள்ளது. இப்புதிய உணவகம் Dr. சாம் பால் மற்றும் கலைமாமணி ராஜேஷ் வைத்யா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. கடைதிறப்பு விழாவை முன்னிட்டு சமூக நல நடவடிக்கையாக, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு அதனை

LYCA Productions சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் துவங்கியது

 நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு இன்று 2021 பிப்ரவரி 11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர்.  இப்படத்தினை LYCA Productions நிறுவனம் Sivakarthikeyan Productions உடன் இணைந்து இபடத்தினை தயாரிக்கிறது. கல்லூரியை பின்னணி களமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு  திரைப்படமாக, இப்படம் உருவாகிறது. நடிகை பிரியங்கா அருள் மோகன் “டாக்டர்” படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இப்படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். நடிகர்கள் SJ சூர்யா, சமுத்திரகனி, விஜய் டீவி புகழ் ஷிவாங்கி, RJ விஜய், முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பல  பிரபல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தினை இயக்க இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். LYCA Productions சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றார்.

’செம திமிரு' படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்

ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். மிஷ்கின் இயக்கி வரும் 'பிசாசு 2' மற்றும் அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது 'செம திமிரு' என்ற படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ளது ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துருவா சர்ஜா. இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். இவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் 'செம திமிரு'. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்தப் படத்தைத் தான் பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்

தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’-ன் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இசை என்பது ஒரு திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவதாலும், ‘ராதே ஷியாம்’ பன்மொழிப்படமாக உருவாகி வரும் காரணத்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான இசையமைப்பாளர்களை ‘ராதே ஷியாம்’ படக்குழு ஒன்று திரட்டியுள்ளது. இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாகவும், வித்தியாசமாகவும், விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும். இப்படத்தின் இந்தி பதிப்பிற்கும், தமிழ்,தெலுங்கு,  மலையாளம்,கன்னடம் பதிப்பிற்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். பாடல்கள் வேறாக இருந்தாலும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு நடிகர்கள் உட்பட அனைவரும் முழுமையாக ஒத்துழைத்த காரணத்தால், பாடல்கள் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்டன. ‘ராதே ஷியாமின்’ இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கு

ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பு சென்னை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து தர  ஒப்பந்தம் செய்துள்ளது. இருதய நோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 15 வயதிற்குட்பட்ட சிறார்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில், கடந்த சில ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட இலவச இருதய அறுவை சிகிச்சைகள் செய்து கொடுத்துள்ள மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவரான குணால் சௌத்ரி, தற்போது காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 100 குழந்தைகளுக்கு  இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து கொடுக்க முன்வந்துள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை  காவேரி மருத்துவமனையில்  கையெழுத்தானது. முதல் 10 இருதய அறுவை சிகிச்சைக்கான செலவுக்காக ரவுண்ட் டேபிள் அமைப்பினர் காவேரி மருத்துவமனைக்கு காசோலையை வழங்கினர். நடப்பாண்டில் 100 இலவச அறுவை சிகிச்சை செய்யவும் அடுத்த பத்தாண்டுகளில் ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்யவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய காவேர

ஸ்ரீ வாரி ஃபில்ம்ஸ், P.ரங்கநாதனின் அடுத்த தயாரிப்பு சேரன் - கெளதம் கார்த்திக் இணைந்து  நடிக்கும் புதிய படம் 

கடந்த ஆண்டில் வெளியான , யோகிபாபு எமதர்மனாக  நடித்த  தர்மபிரபு  வெற்றிப்படத்தின்  மூலம்  எல்லோரது கவனத்தையும்  ஒட்டு மொத்தமாக ஈர்த்த  ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக   முன்னணி  நடிகர்கள்  பலரையும் வைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள்   குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும்  இந்த திரைப்படத்தில்  கெளதம் கார்த்திக்குடன்  இயக்குனர் சேரன்  இணைந்து   நடிக்கிறார் . டாக்டர் ராஜசேகர் ஜீவிதாவின் இரண்டாவது மகள்   ஷிவாத்மிக்கா அறிமுக கதாநாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள் .  மற்றும் டேனியல் பாலாஜி , சரவணன் , கிழக்கு சீமையிலே விக்னேஷ் ,  சிங்கம் புலி , ஜோமல்லூரி , கவிஞர் சினேகன் , நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் ,  மௌனிகா,    மைனா , பருத்திவீரன் சுஜாதா ,   ஜானகி , பிரியங்கா  , நக்கலைட்  தனம் என ஏராளமான  நட்சத்திரங்களோடு  ஒரு குடும்ப சித்திரமாக  உருவாகும் இந்த திரைப்படத்தை  நந்தா பெரியசாமி எழுதி இயக்க ,  பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவில் , சிவப்பு மஞ்சள் பச்சை புகழ் சித்துகுமார் இசையமைப்பில் கவிஞர் சினேகன்  பாடல்கள் எழுத , ஸ்ரீ வாரி பிலிம்ஸ் த

Colors Tamil brings special celebrities Comedian Adhavan and Actress Sanjana Singh to celebrate Valentine Weekend

~ Tune in to Colors Tamil on 13th and 15th February 2021 from 8:30 PM onwards to experience the realm of romance~ Chennai, February 11, 2021:  Love is in the air and Colors Tamil is set to make you feel even mushier as you make your plans for the upcoming Valentine’s Day. IdhayathaiThirudathey and SillunuOruKaadhal, two popular love stories on Tamil Nadu’s youngest entertainment channel, will touch your hearts once again. To be aired on February 13 and 15, either side of the V-Day, IdhayathaiThirudathey and SillunuOruKaadhal will showcase love in its various dimensions. Like always, the shows will be graced by celebrity stars who will make special appearances. IdhayathaiThirudathey will see popular comedian Aadhavan while SillunuOruKaadhal brings renowned actress Sanjana Singh to Colors Tamil for the first time. In tune with the mood of the weekend, Idhayathai Thirudathey will see Shiva and Sahana getting even closer to each other. On the other hand, recently-launched romantic drama Si

’வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நட்சத்திரங்கள்

வியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடை போட்டு வருவதோடு, அதன் அங்கமான ‘வி டாக்கீஸ்’ (WE TALKIES) யுடியுப் சேனல், 8 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்களை உடனுக்கு உடன் கொடுத்து வருவதில் வி சேனலுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. வி இதழின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட அதன் நிறுவனர் சுமதி ஸ்ரீனிவாஸின் மகன் கிரணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கீர்த்தனா என்பவரை அவர் மணந்தார். இவர்களின் திருமணத்திற்கு பிந்தைய பிரம்மாண்ட விழா ஒன்றை வி குடும்பம் நடத்தியது. கொரோனா அச்சமாக நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதில் பிரபலங்கள் சிலர் தயக்கம் காட்டி வரும் தற்போதைய சூழலிலும், வி குடும்ப விழாவான இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு கிரண் - கீர்த்தனா தம்பதியை வாழ்த்திஆசீர்வதித்ததை கண்டு வி குடும்பம் மகிழ்ந்தது. நிகழ்வில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கு வசதியாக சுமதி ஸ்ரீனிவாஸ் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையு

தூங்காமல் விழித்து இருந்து "லைவ் டெலீகாஸ்ட்" வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளி வர இருக்கும் "லைவ் டெலிகாஸ்ட்" தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது.   மாந்த்ரீக சக்திகள் நிறைந்த , ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக் தொடர் ஒன்றை படமாக்கப் படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே "லைவ் டெலிகாஸ்ட்". தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் "நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்து எடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது.மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம்  தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்" என்று தி

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் ஒரு வாரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. .சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த  படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே  வெளியாகியிருந்தது...  வெளிவந்த இரண்டே நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ட்ரெய்லர் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில்  1.5மில்லியன்  பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.         எஸ். ஜெயக்குமார், ஜெ.காவேரி, திரு.ஜெ.சபரிஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். திரு.ஜெ. சபரிஷ் இப்படத்தை  இயக்கியுள்ளார். தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.

Benchmark Films தயாரிப்பில், விதார்த் நடிக்கும் 25 வது படம்

நடிகர் விதார்த், நல்ல படங்களின் காதலன், நட்சத்திர அந்தஸ்தை பொருட்படுத்தாமல் நல்ல படங்களை தொடர்ந்து செய்து, மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரை பெற்றிருப்பவர். நல்ல சினிமாவின் தீவிர காதலர்.  வேறு வேறு ஜானரில் ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், ஆற்றல், அஞ்சாமை என  ஐந்துபடங்களை தற்போது செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் 25 வது படம் தற்போது தயாராகிறது. Benchmark Fims நிறுவன தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் சீனிவாசன் இப்படத்தினை இயக்குகிறார். புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்தி திரில்லுடன் பரபரப்பாக  நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வரவேண்டும் என்கின்ற தவிப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது. படத்தில் இசை முக்கிய பங்கு வகிப

CASAGRAND hosts soul-touching live performances at CASAGRAND Firstcity

  ~Famous stand-up comedian Azhar and Chennai Street Band entertained the audience with their outstanding performances~ Chennai, 10 February 2021 : CASAGRAND, one of the leading real estate developers in South India hosted a first-of-its- kind grand gala night at their recently launched property, CASAGRAND FirstCity in Sholinganallur, Chennai, as part of its recently launched initiative “ CASAGRAND PRIVILEGE ” - a step to build longstanding relationship with their customers. The exciting and fun-filled evening showcased an interesting cocktail of events namely a rib-tickling performance by the renowned stand –up comedian  Azar  ( Kalaka Povathu Yaaru Fame ) who had left the audience in splits coupled with a soul rendering performance by the renowned  Chennai Street Band , a regional pop-music band from Chennai. Embracing the need to build bonds and celebrate their success as a CASAGRAND family along with their homebuyers, the specially invited guests were the highlight of this joyful o

மாயத்திரை டீசரை வெளியிட இயக்குனர் ப்ரியதர்சன்

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் .ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் . இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . பிரபல இயக்குனர் & தயாரிப்பாளரான ப்ரியதர்சன் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார் . மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம். தொழில்நுட்பக்குழு : நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் இயக்கம் - தி.சம்பத் குமார் தயாரிப்பு - ப.சாய் இசை - S .N அருணகிரி ஒளிப்பதிவு -இளையராஜா கலை இயக்கம்

அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம் 2-வை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு எடுத்துச் செல்கிறது

கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அமேசாம் ப்ரைம் வீடியோ ரசிகர்களை மகிழ்விப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது. ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஏழு ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முன்கதை சுருக்க வீடியோவை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்) அந்த கொடிய இரவில் என்ன நடந்தது என்பதையும், தன் குடும்பத்தை பாதுகாத்து தான் செய்த காரியங்களை பற்றியும் விவரிக்கிறார். “நீங்கள் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்வீர்கள்?” என்ற ஜார்ஜ்குட்டி கேட்பதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது. ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பவூர் தயாரித்து, ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள,  த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவருடன் மீனா, அன்சிபா, எஸ்தர், சித்திக், ஆஷா ஷரத், முரளி கோபி, மற்றும் சாய்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி 19, 2021 முதல் உலகமெங்கும் அமேசான் ப்ரைம் வீடியோவில் த்ரிஷ்யம

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில் “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player

ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமா தொடராக உருவாகியுள்ள “வதம்” இணையதொடர்  12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது. சென்னை 9 பிப்ரவரி 2021 : சக்தி பாண்டியன் தெளிவும், துணிவும் கொண்ட நேர்மையான IPS அதிகாரி. என்னவாயினும் உரிய நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பவர். ஒரு பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமாவாக  ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில் உருவாகியுள்ள “வதம்” MX Original Series இணயதொடரை  MX Player தனது வாடிக்கையாளர்களுக்காக இவ்வாரம் வழங்குகிறது. ஷ்ருதி ஹரிஹரன் முன்னணி கதாப்பாத்திரத்தில்,  சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரியாக நடிக்கும் இத்தொடரில், பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து, பிரபல தொழிலதிபர் ஒருவரின் கொலையை விசாரிக்கின்றார். கொலை வழக்கில் வெளியாகும் உண்மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது. ஒரு பெண்ணாக அவரது துறையிலிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் பெரும் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கின்றார். ஆனால் அவரது துணிவும், நேர்மையும் நீதிக்கான போரட்டமும் இணைந்த