முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாயத்திரை இசை வெளியீட்டு விழா

 


ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் "மாயத்திரை" படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .அசோக் குமார். ஷீலா ராஜ்குமார் , இயக்குனர் சம்பத்குமார், தயாரிப்பாளர் V சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பூ சுந்தர் மற்றும் சுஹாசினி மணிரத்னம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், செயலாளர் ,துணைத்தலைவர், பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த இசைவெளியீட்டு விழாவில் குஷ்பூ பேசியது :

இங்கு சினிமாவைப் பற்றி மட்டும்தான் நான் பேச வந்திருக்கிறேன் .அரசியல் பற்றி அல்ல.தமிழக அரசிற்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மதுபான கடைகளை அனைத்து இடங்களிலும் திறக்க அனுமதி வழங்கி இருக்கிறீர்கள்.

அதேபோல் திரையரங்குகளையும் 100 சதவீதம்  பார்வையாளர்கள் பார்க்க அனுமதித்தால்  சினிமா நல்லபடியாக வளர எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் .கொரோனா காலத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சினிமாவில் தயாரிப்பாளர்களில் சில  பிரச்சனைகள் இருந்தால் முரளி ராமசாமி அவர்களை சந்தியுங்கள் .விரைவில் தீர்வு கிடைக்கும். சிறிய தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக முரளி ராமசாமி அவர்கள் இருக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனர் சம்பத்குமார் அவர்கள் பேசியவை

இந்தப் புத்தாண்டு தினத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர் சாய் பாபு அவர்கள்.இந்த படம் ஒரு பேயின் பேரன்பை சொல்லும் படம். திரு பாலுமகேந்திரா அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒரு கதை அதற்கான கதாபாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார் .அதன்படிதான் இந்த படம் அமைந்துள்ளது.இந்த படம் ஒரு கதாநாயகியை மையப்படுத்திய படம். ஷீலா ராஜ்குமார் வாழ்ந்திருக்கிறார்.  அசோக்குமார் என் நீண்ட கால நண்பர் இந்த படத்தில் நடித்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இசை வெளியீடு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சுகாசினி மற்றும் குஷ்பூ  அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும் " இவ்வாறு பேசினார் .

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் கதிரேசன் அவர்கள் பேசியது

புத்தாண்டு தினத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி .இந்த படத்தின் ஒரு பாடல் வீடியோவை பார்த்தோம் .இயக்குனர் சம்பத்குமார் உழைப்பு அதில் தெரிகிறது .இசையமைப்பாளர் அருணகிரி சிறப்பாக செயல்பட்டுள்ளார் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி அவர்கள் பேசியது

ஆடியோ வியாபாரமாகி இசை வெளியீட்டு விழா நடைபெறுவது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது .அதுவும் வருடத்தின் முதல்நாளில் நடைபெறுவது சிறப்பு .இது ஒரு மற்ற படங்களுக்கு ஒரு ஆரம்பமாக இருக்கும் என கருதுகிறேன். புதுமுகமாக யாரேனும் படம் தயாரிக்க வந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்  ஒரு பக்க பலமாக இருக்கும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  புதிய முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. சிறிய படம் பெரியப்படம் அனைத்திற்கும் நன்மை பயக்கும் விதமாக. இந்தப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகை சுகாசினி மணிரத்னம் பேசியவை

நான் இன்றுடன் திரையுலகிற்கு அறிமுகமாகி 40 வருடங்கள் ஆகின்றது.வேறு எந்தத் துறையைத் தவிர சினிமாவை மட்டுமே நான் மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன்.அசோக்குமார் ,ஷீலா, சம்பத்குமார் சாய்பாபு படத்தில் நடிப்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்இந்த படத்தில் நடித்த அசோக், ஷீலா மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் .படம் மிகப்பெரிய வெற்றி அடையும் நம் எல்லோருடைய ஆதரவும் அன்பையும் இப்படத்திற்கு அளிப்போம்.

நடிகை ஷீலா ராஜ்குமார் பேசியவை

இந்த வருடத்தின் முதல் நாள் நல்ல தொடக்கம் என நான் நினைக்கிறேன். இந்த படத்தில் பல அனுபவங்களை நான் கற்றுக்கொண்டேன் .தயாரிப்பாளர் அவர்கள் என்னை இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக நான் கருதுகிறேன் . பேய் படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே எடுக்கப்பட்டது . இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி .

 
நடிகர் அசோக் குமார் பேசியது

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சாய்பாபு அவர்களுக்கு என் நன்றி . ZERO-ல இருந்து carrier-ஆ ஆரம்பிச்சு வாழ்க்கை செல்கிறது , இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் ஒரு அடையாளம் கிடைக்கும் . இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
 
தயாரிப்பாளர் சாய்பாபு பேசியவை
காஸ்டீயும் டிசைனர் ஆக வாழ்க்கையை தொடங்கி இன்று தயாரிப்பாளராக மாரி இருக்கிறேன் .பல உச்ச நட்சதிரங்களுக்கு காஸ்டீயும் டிசைனர் ஆக பணியாற்றி இருக்கிறேன் . நான் என்னை போல் சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் பலபேரை தெரியப்படுத்துவேன் . இந்த சினிமா என்ன எனக்கு கொடுத்ததோ அதையே திருப்பிக்கொடுப்பேன் . இப்படத்தின் இயக்குனர் சம்பத் , அசோக் , ஷீலா மற்றும் தொழில்நுட்ப ஆட்கள் அனைவருக்கும் நன்றி . இந்த விழாவை சிறப்பித்துக்கொடுத்த குஷ்பூ மற்றும் சுஹாசினி அவர்களுக்கும் , தயாரிப்பாளர் சங்கத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
 
இசை அமைப்பாளர் SN அருணகிரி பேசியவை வித்யாசமான கதைக்களத்திற்கு இசை அமைத்தது சவாலாக இருந்தது . பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது .
 
நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்  
 

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் - தி.சம்பத் குமார்
தயாரிப்பு - ப.சாய்
இசை - S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம்  - பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் - ராதிகா
சண்டைப்பயிற்சி - பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் - அசோக்  
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

அரிய வகை நோயுடன் போராடும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவ பொதுமக்களிடம் பெற்றோர் வேண்டுகோள்

சென்னை, ஆகஸ்ட் 2024: தண்டுவட தசைநார் சிதைவு நோயுடன் போராடும் தங்கள் இளம் மகள் ஷ்ரீனிகாவை காப்பாற்ற  சென்னையை சேர்ந்த அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு அரிய மரபணு நோயான இந்நோய் சுவாசிக்கவும், விழுங்கவும், இறுதியில் நகரவும் முடியாதபடி படிப்படியாக தசைகளை பலவீனப்படுத்த கூடியதாகும். இந்த நோயுடன் போராடி வரும் ஷ்ரீனிகாவின் சிகிச்சைக்கு சோல்கென்ஸ்மா என்னும் ஊசி தேவைப்படுகிறது. 19,512 அமெரிக்க டாலர் விலை மதிப்புடைய இந்த ஊசி இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் ஆகும். இந்த ஊசி உடனடியாக தேவைப்படுவதால்   இக்குழந்தையின் பெற்றோர் தங்களது பணத்தேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், ஆட்டோக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சென்று உதவி கோரி வருகிறார்ககள். இதன்மூலம் பொதுமக்களின் ஆதரவுடன் ஷ்ரீனிகாவின் பெற்றோர் ரூபாய் 1.8 கோடி வரை சேகரித்துள்ளனர். குழந்தையின் சி...

Thryve Digital plants 2500 saplings in Chennai under its ‘A Tree for Every Thryvian’ initiative

Thryve Digital, a leading provider of healthcare technology and operations services to some of the United States’ foremost payors and providers, has strengthened its environmental commitment with the latest phase of its plantation drive, A Tree for Every Thryvian, in Chennai. In collaboration with Forests by Heartfulness, this initiative is a part of the company’s new eco-focused CSR program, Thryve Eco Warriors, and it goes beyond traditional tree-planting efforts.  Following the success of this initiative in Hyderabad, where 1,500 trees were planted, Thryve has now planted 2,500 saplings in Chennai. Each sapling, marked with the name of a Thryve associate and geo-tagged for updates, builds a personal bond, making every employee feel connected and responsible for their part in nurturing a greener environment. Speaking about this, Balasubramanian Sankaranarayanan, CEO and President, Thryve Digital, said, “Our goal is to not just grow trees, but to nurture a culture of e...