முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும், விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

  

நடிகர் விஜய் ஆண்டனி, தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான திரைக்கதைகள் மூலம் மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. அடுத்ததாக அவர் நடிப்பில்   வரவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில் துப்பறியும் நபராக ஒரு புதிய வித்தியாசமான பாத்திரத்தில் ரசிகர்களை  மகிழ்விக்கவுள்ளார். தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பையும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ரித்திகா சிங், சந்தியா என்ற இளம் காவலராக விஜய் ஆண்டனியுடன் இணைந்து  பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தோன்றுகிறார். பாலாஜி குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் B, பங்கஜ் போரா மற்றும் S விக்ரம் குமார் ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை உடன் இணைந்து, Lotus Pictures சார்பில் சித்தார்த்தா சங்கர் மற்றும் அசோக் குமார்  உடன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குனர் பாலாஜி குமார் கூறுகையில்.., கொலை திரைப்படம்  1923 இல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும், அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை உடைக்க உலகம் துடித்தது. இப்படத்தின் இறுதி திரைக்கதை பிரதிக்கு முன்  30 மாதிரி வரைவுகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது, கதையை  நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற இந்த தேவை இருந்தது.  படத்தின் சாராம்சம் பற்றி அவர் மேலும் கூறுகையில்.., “கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது மேல்தட்டு குடியிருப்பில் கொலை செய்யப்படுகிறார். அவளுக்குத் தெரிந்த ஐந்து ஆண்களில் , ஒவ்வொருவரும் லீலா இறக்க வேண்டி விரும்புவர்களாக இருக்கிறார்கள். அதில் கொலையாளி யார் என்பது மர்மம். துப்பறியும் நபரான விநாயக் பல ஆண்டுகளாக தனிப்பட்ட சோகத்தால் களப்பணிகளில் இருந்து விலகி, முடங்கி இருக்கிறார். இந்த கொலை வழக்கு சிக்கலானதாக இருப்பதால், காவல்துறைக்கு வேறு வழிகள் இல்லை, கொலை மர்மத்தை உடைக்க அவரை மீண்டும் கொண்டு வர வேண்டும். மர்மத்தைத் தீர்க்கும் வல்லவராக அவர் இருக்கிறார். ரித்திகா சிங் இப்படத்தில் சந்தியாவாக நடிக்கிறார், அவர் தனது உயரதிகாரியான விநாயகின் கீழ் வேலை செய்து வழக்கின் மர்மங்களை கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும்.

விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் இப்படத்தின்  முதன்மை பாத்திரங்களில்  நடிக்க, ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா ஆகியோருடன் மற்றும் பல  முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னதாக விடியும் முன், மற்றும் 9 லைவ்ஸ் ஆஃப் மாறா போன்ற படங்களை இயக்கிய பாலாஜி குமார் 'கொலை' படத்தை எழுதி இயக்கியுள்ளார், . சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு (விடியும் முன், இறுதி சுற்று, என்ஜீகே, இறைவி புகழ்), R.K.செல்வா படத்தொகுப்பு (சார்பட்டா பரம்பரை, கர்ணன், பரியேறும் பெருமாள், மூக்குத்தி அம்மன்) ஆகியவற்றைக் கையாள்கின்றனர். இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். முன்னதாக, அவர் விடியும் முன், மெரினா, நெற்றிக்கண், அவள் மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த இசைக்காக பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

'கொலை' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Infiniti Film Ventures நிறுவனமும், விஜய் ஆண்டனியும் ஏற்கனவே 'கோடியில் ஒருவன்' படத்தில்  இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் 'ரத்தம்' மற்றும் 'மழை பிடிக்காத மனிதன்' ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றனர் இந்த இரண்டு படங்களும்  ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

அரிய வகை நோயுடன் போராடும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவ பொதுமக்களிடம் பெற்றோர் வேண்டுகோள்

சென்னை, ஆகஸ்ட் 2024: தண்டுவட தசைநார் சிதைவு நோயுடன் போராடும் தங்கள் இளம் மகள் ஷ்ரீனிகாவை காப்பாற்ற  சென்னையை சேர்ந்த அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு அரிய மரபணு நோயான இந்நோய் சுவாசிக்கவும், விழுங்கவும், இறுதியில் நகரவும் முடியாதபடி படிப்படியாக தசைகளை பலவீனப்படுத்த கூடியதாகும். இந்த நோயுடன் போராடி வரும் ஷ்ரீனிகாவின் சிகிச்சைக்கு சோல்கென்ஸ்மா என்னும் ஊசி தேவைப்படுகிறது. 19,512 அமெரிக்க டாலர் விலை மதிப்புடைய இந்த ஊசி இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் ஆகும். இந்த ஊசி உடனடியாக தேவைப்படுவதால்   இக்குழந்தையின் பெற்றோர் தங்களது பணத்தேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், ஆட்டோக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சென்று உதவி கோரி வருகிறார்ககள். இதன்மூலம் பொதுமக்களின் ஆதரவுடன் ஷ்ரீனிகாவின் பெற்றோர் ரூபாய் 1.8 கோடி வரை சேகரித்துள்ளனர். குழந்தையின் சி...

Thryve Digital plants 2500 saplings in Chennai under its ‘A Tree for Every Thryvian’ initiative

Thryve Digital, a leading provider of healthcare technology and operations services to some of the United States’ foremost payors and providers, has strengthened its environmental commitment with the latest phase of its plantation drive, A Tree for Every Thryvian, in Chennai. In collaboration with Forests by Heartfulness, this initiative is a part of the company’s new eco-focused CSR program, Thryve Eco Warriors, and it goes beyond traditional tree-planting efforts.  Following the success of this initiative in Hyderabad, where 1,500 trees were planted, Thryve has now planted 2,500 saplings in Chennai. Each sapling, marked with the name of a Thryve associate and geo-tagged for updates, builds a personal bond, making every employee feel connected and responsible for their part in nurturing a greener environment. Speaking about this, Balasubramanian Sankaranarayanan, CEO and President, Thryve Digital, said, “Our goal is to not just grow trees, but to nurture a culture of e...