முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இயக்குநர் அவதாரம் எடுக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்


ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின், சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிக்கும் 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' படத்தை இயக்குகிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். 'நளனும் நந்தினியும்', 'சுட்டக்கதை', 'நட்புனா என்னான்னு தெரியுமா', 'முருங்கக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார்.

இவற்றுடன் கார்த்திக் சுப்புராஜின் அசோசியேட் விஜயராஜ் இயக்கத்தில் பரத், மிர்சி செந்தில், கரு.பழனியப்பன், விஜய் டிவி அசார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் 'முன்னறிவான்' படத்தை தயாரித்து வருகிறார்.

'மிக மிக அவசரம்', 'கூர்கா', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ளார். அந்த வரிசையில் 'அதோ அந்தப் பறவை போல' படம் விநியோகத்துக்கு தயாராக உள்ளது.

தற்போது, இவர் ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் கதாநாயகன் பெயர் மார்க்கண்டேயன். கதைப்படி இவர் பெரும் பணக்காரர். படத்தின் முதல்பாதியில் இவர் லண்டன், ஜெர்மனி, நியூசிலாந்து நாடுகளில் மார்க் என்ற பெயரில் உலா வருகிறார். பின்னர், இவருக்கு இந்தியாவில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்தப் போட்டியில் பங்கேற்க 5 நிபந்தனைகள் இருக்கின்றன. மார்க்கண்டேயன் என்ற தனது உண்மையான முழுப்பெயருடன் தாயகம் திரும்பும் கதாநாயகன் போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? அவர் போட்டியில் பங்கேற்றாரா, வெற்றி பெற்றாரா என்ற கதைகளம் நகைச்சுவைப் பின்னணியுடன் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது.

சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிக்கும் இப்படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.

படத் தயாரிப்பாளர்கள் சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை ஏற்கெனவே 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்ற திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக இருந்துள்ளனர்.
அதிரடி, ஆர்ப்பாட்டம் என்றில்லாமல் நல்ல ஆழமான கதைக்கருவுடன் அழுத்தமானப் படங்களைக் கொடுத்தால் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலம் நிலைத்திருக்கலாம் என்ற புரிதல், நம்பிக்கையுடன் முழுநேர தயாரிப்பில் இறங்குகின்றனர் இந்த இரட்டைத் தயாரிப்பாளர்கள்.

இயக்குநர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு திரைக்களத்தில் இது ஐந்தாவது அவதாரம் என்றே சொல்ல வேண்டும். விநியோகிஸ்தர், 9 திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் என்று அறியப்பட்டவர் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் ஒரு பாடலையும் எழுதினார். சித் ஸ்ரீராம் குரலில், தரண் இசையில் பதிவான அந்தப் பாடல் இன்றளவும் யூடியூபில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவருகிறது. பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டும். வார்த்தைப் பிரயோகத்தை சரியாகச் செய்வதன் மூலம் நாம் ரசிகர்களுக்குச் சொல்லவேண்டிய கருத்தை சரியாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை தனது எழுத்தால் நிரூபித்திருக்கிறார். 4-வதாக அவர் ஓர் யூடியூப் பிரபலம். ஃபேட்மேன் (FATMAN) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி மக்களுக்கு அறிமுகமானவர். ஏற்கனெவே திரைத்துறையுடன் ஒன்றிய 4 தளங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இப்போது புதிய பரிமாணத்தில் இயக்குநராக அவதரித்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக முன்ன்னி கதாநாயகன் நடிக்க உள்ளார் ஒளிப்பதிவாளராக முன்னணி கலைஞரை ஒப்பந்தமாகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தைப் பொங்கல் நாளன்று வெளியிடப்படுகிறது.

இப்படத்தில் முதன்முறையாக, பிரியா மாலி என்ற பாடகி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்கு நிர்மல் எடிட்டிங் செய்கிறார். கலை, நர்மதா வேணி. காஸ்ட்யூம் டிசைனராக ஹீனா பணியாற்றுகிறார். ஸ்டேஜ் புகைப்படக்காரராக ராஜா, டிசைனராக சந்துரு பணியாற்றுகின்றனர். பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல்படுகிறார்.
பெரும் பொருட்செலவில் தயாராகும் 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' படத்தின் படப்பிடிப்பு சித்திரை வருடப்பிறப்பை ஒட்டி தொடங்குகிறது.

இப்படத்தின் முதல்பாதி நியூசிலாந்து, லண்டன், ஜெர்மனியிலும், இரண்டாம் பகுதி தமிழகத்திலும் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இத்திரைப்படம் ஒரு குடும்பப் படமாக அதே நேரத்தில் கமர்ஷியல் படமாகவும், பெண்களைக் கவரும் படமாகவும் இருக்கும் என படக்குழுத் தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

அரிய வகை நோயுடன் போராடும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவ பொதுமக்களிடம் பெற்றோர் வேண்டுகோள்

சென்னை, ஆகஸ்ட் 2024: தண்டுவட தசைநார் சிதைவு நோயுடன் போராடும் தங்கள் இளம் மகள் ஷ்ரீனிகாவை காப்பாற்ற  சென்னையை சேர்ந்த அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு அரிய மரபணு நோயான இந்நோய் சுவாசிக்கவும், விழுங்கவும், இறுதியில் நகரவும் முடியாதபடி படிப்படியாக தசைகளை பலவீனப்படுத்த கூடியதாகும். இந்த நோயுடன் போராடி வரும் ஷ்ரீனிகாவின் சிகிச்சைக்கு சோல்கென்ஸ்மா என்னும் ஊசி தேவைப்படுகிறது. 19,512 அமெரிக்க டாலர் விலை மதிப்புடைய இந்த ஊசி இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் ஆகும். இந்த ஊசி உடனடியாக தேவைப்படுவதால்   இக்குழந்தையின் பெற்றோர் தங்களது பணத்தேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், ஆட்டோக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சென்று உதவி கோரி வருகிறார்ககள். இதன்மூலம் பொதுமக்களின் ஆதரவுடன் ஷ்ரீனிகாவின் பெற்றோர் ரூபாய் 1.8 கோடி வரை சேகரித்துள்ளனர். குழந்தையின் சி...

Thryve Digital plants 2500 saplings in Chennai under its ‘A Tree for Every Thryvian’ initiative

Thryve Digital, a leading provider of healthcare technology and operations services to some of the United States’ foremost payors and providers, has strengthened its environmental commitment with the latest phase of its plantation drive, A Tree for Every Thryvian, in Chennai. In collaboration with Forests by Heartfulness, this initiative is a part of the company’s new eco-focused CSR program, Thryve Eco Warriors, and it goes beyond traditional tree-planting efforts.  Following the success of this initiative in Hyderabad, where 1,500 trees were planted, Thryve has now planted 2,500 saplings in Chennai. Each sapling, marked with the name of a Thryve associate and geo-tagged for updates, builds a personal bond, making every employee feel connected and responsible for their part in nurturing a greener environment. Speaking about this, Balasubramanian Sankaranarayanan, CEO and President, Thryve Digital, said, “Our goal is to not just grow trees, but to nurture a culture of e...